என் மகன் பிரதீப்பின் கைவண்ணத்தில் உருவான வண்ண மயில் இது.
தேவையான பொருட்கள்:-
- காட்டன் ரோல் - 1
- காப்பர் வயர் - சிறிது
- காட்டன் பட் -1
- செலோ டேப் - 1
- கட்டிங் ப்ளேயர் - 1
- ஸ்டிக்கர் பொட்டு -2 அட்டை
- குந்தன் ஸ்டோன் - சிறிது
- acrylic colour - ப்ளு,வெள்ளை,மஞ்சள்.
- gauze cloth - சிறிது
- மயில் இறகு - 3
- ரேடியம் பால் - 1
- பெவிகால் - 1
செய்முறை:-
- ரேடியம் பந்தில் முழுவதும் பெவிகால் தடவி ஒரு லேயர் காட்டனை ஒட்டி விட வேண்டும்.
- மயிலின் உடல் பகுதி வருமளவிற்கு காட்டனை சுற்றி கட் பண்ணாமல் தொடர்ந்து தலை பகுதிக்கு காட்டனை கொண்டு வந்து சிறிது காட்டனை விட்டு கட் பண்ணி விட வேண்டும்.
- கட் பண்ணிய காட்டனை உருட்டி உடல் பகுதியோடு சேர்த்து பாண்டேஜ் துணியால் தலை, உடல் அமைப்பு வருமாறு சுற்ற வேண்டும்.
- சுற்றிய துணியை பெவிகால் வைத்து ஒட்டி விட்டு அதன் மேல் ப்ளு கலர் பெயிண்ட் அடித்து விட வேண்டும்.
- மயில் இறகில் கண் போல் உள்ளதை தவிர்த்து இருபுறம் உள்ள முடிகளை கட்பண்ணி எடுக்க வேண்டும்.
- கிராப்ட் சீட்டில் ரோஜா இதழ் போல் வரைந்து கட் பண்ணி பாண்டேஜ் துணியிலும் அதே போல் கட் பண்ணி இரண்டையும் பெவிகால் கொண்டு ஒட்டி காய்ந்த உடன் இதழின் குறுக்கே மடிப்பு வருமாறு மடக்கி விட வேண்டும்.
- இதுபோல் மூன்று இதழ்கள் செய்து மயிலிறகில் வெட்டியமுடிகளை ஒட்டி விட வேண்டும்.
- இதை உடல் பாகத்தின் பின் பகுதியில் ஓட்ட வேண்டும்.காப்பர் வயரை மயிலின் கொண்டை போன்றும்,கால் விரல்களை போன்றும் வளைத்து கட் பண்ண வேண்டும்.
- காட்டன் பட் எடுத்து நடுப்பகுதியில் கட் பண்ண வேண்டும்.இது இரண்டு பகுதிகளாக ஒரு முனை துளையோடும் மறுமுனை பஞ்சு உருண்டையோடும் இருக்கும்.
- பஞ்சு உருண்டை உள்ள முனையை கால்களாக பாவித்து வயிற்றுப் பகுதியின் அடியில் ஓட்ட வேண்டும்.
- இரண்டையும் ஒட்டிய பின் மறு முனையில் உள்ள துளையில் விரல்களாக வெட்டிய வயரை செருகி விட வேண்டும்.
- ஒட்டிய கால்கள் பிரிந்து விடாமல் இருக்க சிறிது பாண்டேஜ் துணியை கட் பண்ணி வயிற்று பகுதியோடு சேர்த்து ஓட்ட வேண்டும்.
- கிராப்ட் சீட்டில் சிறகுகள் போல் வரைந்து கட் பண்ணி பாண்டேஜ் துணியை அதே அளவில் வெட்டி இரண்டையும் பெவிகால் வைத்து ஒட்டி விட வேண்டும்.
- இதன் மேல் லைட் ப்ளு கலரும்,மற்றொரு சிறகில் ஆரஞ்சு கலரும் அடித்து இவை இரண்டையும் உடலின் மேல் பாகத்தில் இரு புறமும் ஒட்டி விட வேண்டும்.
- தலையில் கொண்டை போன்று வளைத்த வயரை குத்தி விட்டு வெள்ளை,கருப்பு பெயிண்ட் வைத்து கண்கள் வரைந்து முடிக்க வேண்டும்.
- பச்சை நிற குந்தன் கற்களை பின்புறம் வைத்துள்ள தோகையில் அங்கங்கே இடைவெளி விட்டு ஒட்டி விட்டால் வண்ண மயில் ரெடி.