Quilling: Greeting Card

16 comments
வலையுலக உறவுகள் அனைவருக்கும் வணக்கம். நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு சிறிய கை வினையுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி..:)

வலையுலக நண்பர்களுக்காக செய்த இந்த மலர்கொத்து மயில் தோகை, கப் கேக் பேப்பர் வைத்து க்வில்லிங் வேலையில் முயற்சித்தது.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..!


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..!
Read More...

வெண்டைகாய் ஃப்ரை

17 comments
வெண்டைகாய் ஃப்ரை செய்றது கொஞ்சம் லொள்ளு பிடிச்ச வேலைதான் ஆனா செய்தா வெண்டைகாய் விலுவிழுப்பு  பிடிக்காம அதைசாப்பிடாதவங்களும் குறிப்பா குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.காயில் இருக்கும் விதைகளை முழுவதும் எடுத்துவிட்டு செய்வதால் விலுவிலுப்பு இல்லாமல் வேலையும் மிக வேகமாக எளிதாக முடிந்துவிடும்.
தேவையான பொருட்கள்:-
  • வெண்டைகாய்                                   - 500 கிராம்
  • மசால் பொடி                                       - 2 ஸ்பூன்
  • மிளகாய் பொடி                                   - 1 ஸ்பூன்
  • உப்பு                                                         - 1 ஸ்பூன்
  • கடலை மாவு                                       - ஒரு கைபிடி
  • எண்ணெய்                                           - வறுக்க தேவையான அளவு
செய்முறை:-
  • வெண்டைகாயை நன்றாக கழுவி ஈரம் போக துடைத்து நீள வாக்கில் கீறி விதை முழுவதையும் எடுத்து விடவும்.
  • விதை எடுத்த காயை விரல் நீளத்திற்கு துண்டுகள் போட்டு நறுக்கவும்.
  • நறுக்கிய  காயை ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு, கடலைமாவு,மிளகாய் பொடி, மசால் பொடி அனைத்தையும் போட்டு நன்றாக கலந்து 10 நிமிடம் வைக்கவும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து  எண்ணெய் ஊற்றி சூடானவுடன் சிறிது சிறிதாக காய் கலவையை அதில் போட்டு பொன்னிறமாக சிவந்து வந்தஉடன் எடுத்து தட்டில் போடவும்.
  • வெண்டைகாய் ஃப்ரை தயார். சாம்பார், ரசம் சாதத்திற்கு நன்றாக இருக்கும்.


முதல் நாள் மொட்டாக இருந்த போது எடுத்த படம் இது.


மறுநாள் மலர்ந்தும் மலராமல் பாதி மலரா உதிர்ந்து விட்டது. இதோட பெயர் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.

Read More...

உலர் பழ கேக் (Dry Fruit Cake)

9 comments
அத்திப்பழம் ரத்த விருத்திக்கு ஏற்ற பழம். ஆனா அதை அப்படியே சாப்பிடுவது அநேகருக்கு பிடிக்காது . ஆப்ரிகாட்டும் அத்தியின் மருத்துவ தன்மையை கொண்டதுதான்... இவை குடல் புழுக்களை அழிப்பதிலும் பித்தப்பை கற்களை போக்குவதிலும் இப் பழங்களின் பணி மகத்தானது.நரம்புகளை  வலுப்படுத்தும் பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளதால் ரத்த சோகையை   போக்கும்.எல்.டி .எல் என்னும் கெட்ட கொழுப்பை நீக்கும்.பேரீச்சை ரத்த விருத்திக்கு உகந்தது.அதிக இரும்பு சத்து கொண்டது. தாது விருத்திக்கு ஏற்றது . என்னதிது பழ கேக்குன்னு தலைப்பை போட்டு சயின்ஸ் பாடம் நடத்துறாங்கன்னு  நினைக்காதீங்க..:) மேல சொன்ன இந்த மூன்று பழங்களோட அன்னாசி பழமும் சேர்த்து செய்த கேக்தாங்க இது. இதை ஹெல்தி கேக்னு கூட சொல்லலாம். ஏன்னா.. மற்ற கேக் செய்முறையில முட்டை, வெண்ணை இவை இரண்டும் இடம் பெறும். இரண்டும் இல்லையென்றாலும் ஏதாவது ஓன்று கண்டிப்பாக இடம் பெறும். இந்த கேக்கில் அதுக்கு சப்டியூட்டா ஆலிவ் ஆயில் மட்டுமே சேர்த்து  செய்திருக்கேன். உங்களுக்கும் பிடிக்கும்னு நம்புறேன்..:)
தேவையான பொருட்கள்:-
  • மைதா மாவு                          - ஒரு கப்
  • ஆப்ரிகாட்                               - 100 கிராம்
  • அத்திப்பழம்                           - 100 கிராம்
  • பேரீச்சை                                - 100 கிராம்
  • அன்னாசி பழம்                    - அரை கப்
  • உப்பு                                          - அரை ஸ்பூன்
  • ஆலிவ் ஆயில்                     - 50 மில்லி
  • பேக்கிங் பௌடர்                 - 1ஸ்பூன்
  • தேன்                                         - 100 கிராம்
  • வெள்ளை எள்                       - சிறிது
  • பூசணி விதை                        - சிறிது
செய்முறை
  • அன்னாசிபழத்தை  மிக்சியில் அரைகுறையாக அரைத்து கொள்ளவும்.
  • உலர் பழங்கள் அனைத்தையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் நறுக்கிய உலர் பழங்களையும் அரைத்த அன்னாசி பழத்தையும் போட்டு உப்பு, பேக்கிங் பௌடர், தேன், ஆலிவ் ஆயில் இவைகளையும் சேர்த்து அடுப்பில் வைத்து மெலிதான தீயில் 3 நிமிடம் கலவையை வைத்து எடுக்கவும்.
  • சூடான கலவையை மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி ஆறவிடவும்.
  • ஆறிய  கலவையில் மைதாவை சேர்த்து நன்றாக கிளறி கொலகொலப்பாக இல்லாமல் சிறிது திக்காக கலந்து வைக்கவும்.
  • கப்பில் இரண்டு ஸ்பூன்களாக கலவையை வைத்து கலவையின் மேல் வெள்ளை எள், பூசணி  விதைகளை தூவவும்.
  • அவனை முற் சூடு செய்து 180 c யில் பேக் செய்து 20 அல்லது 25 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.
  • உலர் பழ கேக் தயார்.
Read More...

ரங்கோலி

10 comments
ரங்கோலி போடும் பொழுது அதன் அழகை கூடுதலாக காட்டுவது கலர் பொடிதானுங்க.. கலர்பொடியை கடையில் இருந்து வாங்கினாலோ அல்லது வீட்டிலேயே கலர் பொடி தயார் செய்தாலோ அதை அப்படியே ரங்கோலியின் மேல் போடாமல் அதை நன்றாக சல்லடையில் சலித்து எடுத்தால் மிக நைசாக பொடிவரும் .  இந்த பொடியை கோலத்தின் மேல், ரங்கோலியின் மேல்போட்டால் போட்ட டிசைன் பெயிண்ட் செய்தது போல் அழகாக வரும்.டிஷைனுக்கு ஏற்றவாறு கலர் பொடியை சல்லடையை உபயோகித்தும் தூவலாம். வேலை சுலபத்தில் முடியும்.அவ்வாறு போட்ட ரங்கோலிதான் இது.. எப்படி இருக்குன்னு சொல்லுங்க..;)




Read More...

ரகடா பேட்டீஸ்

12 comments
வடஇந்திய உணவு வகைகளில் ஒன்றான ரகடா பேட்டீஸ் இனிப்பும் புளிப்பும்மான ஒரு சிற்றுண்டி .. உருளையில் செய்ய கூடிய  இது வெஜ் பேட்டீஸ் ஆக சிக்கன் பேட்டீஸ் ஆக கீரை வகைகள் சேர்த்து செய்யும் பேட்டீஸாக செய்யலாம்.பட்டாணியில் செய்யும் ரகடாவை பேட்டீஸ் உடன் சேர்த்து சாப்பிடும்போது இனிப்பும் புளிப்பும்மாக மாலைநேர சிற்றுண்டிக்கு பொருத்தமாக இருக்கும்.

பேட்டீஸ்:-

தேவையான பொருட்கள் :-
  • உருளை கிழங்கு                 - கால் கிலோ
  • பிரட்                                          - 3 சிலைஸ்
  • பூண்டு                                     - சிறிது
  • காரன் ப்ளார்                         - 4 டீ ஷ்பூன்
  • உப்பு                                         - சிறிது
  • மிளகாய் பொடி                  - அரை ஸ்பூன்
செய்முறை:-
  • உருளை கிழங்கை வேக வைத்து தோல் உரித்து ரெடியாக வைக்கவும்.
  • பிரட்டை மிக்சியில் போட்டு உதிர்த்து வைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் உருளையை நன்றாக மசித்து வைக்கவும்.
  • அதனுடன் பிரட்,பொடியாக நறுக்கிய பூண்டு, கார்ன் ப்ளார் , மிளகாய் பொடி, உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்து உருண்டையாக உருட்டி வைக்கவும்.
  • அடுப்பில் தவாவை வைத்து சூடானவுடன் உருண்டைகளை தட்டையாக தட்டி எண்ணெய் தடவிய தவாவில் போட்டு வெந்தவுடன் திருப்பி போட்டு மொரு மொறுப்பாக சிவந்த வுடன் எடுத்து வைக்கவும்.
  • பேட்டீஸ் தயார்.

ரகடா:-

தேவையான பொருட்கள் :-
  • பட்டாணி    - ஒரு கப்
  • பல்லாரி                           - ஒன்று (பெரியது)
  • மசால் பொடி                  - 2 ஸ்பூன்
  • டொமாட்டோ சாஸ்   - சிறிது
  • லெமன் ஜூஸ்              - அரை ஸ்பூன்
  • மிளகாய் பொடி            - அரை ஸ்பூன்
  • உப்பு                                  - சிறிது
  • சர்க்கரை                        - அரை ஸ்பூன்
  • இஞ்சி                              - சிறு துண்டு
  • பூண்டு                            - 4இதழ்கள்
  • மல்லித்தழை               -சிறிது
செய்முறை:-
  • பட்டாணியை குக்கரில் வேக வைத்து முக்கால் பாகத்தை தனியாக எடுத்து வைத்து  கொள்ள வேண்டும்.
  • வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய பாதி வெங்காயத்தை போட்டு சுருள வதக்க வேண்டும்.
  • மசால் பொடி, மிளகாய் பொடியை வெங்காயத்தில் சேர்த்து 2 நிமிடம் வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து கிளற வேண்டும்.
  • மிக்சியில் இஞ்சி,பூண்டு, வெங்காயம், மீதியுள்ள பட்டாணி, மல்லி தழை சேர்த்து அரைக்க வேண்டும்.
  • அரைத்த விழுதை கொதிக்கும் குழம்பில் சேர்த்து அதனுடன் சர்க்கரை, தக்காளி சாஸ் சேர்த்து குழம்பு சிறிது கெட்டியானவுடன் இறக்கி விட வேண்டும்.
  • இறுதியில் கிரேவியில் அரை ஸ்பூன் எலுமிச்சை சாற்றை சேர்த்து மல்லித்தழை சேர்த்து கிளறி விட்டால் ரகடா தயார்.
இது எங்க வீட்டு செல்லம் ஸ்கூபி... 10 நாள் குட்டியாக இருந்த போது...

இப்போது 2 மாத குட்டியாக...
Read More...

கார்ன் சிக்கன்

17 comments
தேவையான பொருட்கள் :-
  • சிக்கன் - அரைகிலோ
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை ஸ்பூன்
  • மிளகாய் பொடி - 1 ஸ்பூன்
  • கார்ன் ப்ளார் - 2 ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • கார்ன் சிப்ஸ் - 50 கிராம்
  • முட்டை - ஒன்று
செய்முறை :-
  • சிக்கனை நன்றாக கழுவி உப்பு,மிளகாய் பொடி, இஞ்சி பூண்டு பேஸ்ட், முட்டை சேர்த்து கலந்து நன்றாக பிரட்டி விட்டு அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து தேவையான எண்ணெய் ஊற்றி சூடானவுடன் ஊறிய சிக்கனை போட்டு நன்றாக சிவக்க வறுக்க வேண்டும்.
  • கார்ன் சிப்சை மிக்சியில் பொடி செய்து வைத்து கொண்டு வறுத்த சிக்கனை சூடாக இருக்கும் போதே சிப்ஸ் தூளில் போட்டு பிரட்டி எடுத்து வைக்க வேண்டும்.
  • கார்ன் சிக்கன் தயார்.

Read More...

Quilling - Swan

24 comments
ரொம்ப நாளா க்வில்லிங் செய்ய முயற்சித்து அந்த கிட் கிடைக்காம க்வில்லிங் சரியா வரல்லை.. நம்ம ஏஜ்சலின் சொன்னாங்க டூத் பிக் முனை பகுதியை கீற்றாக வெட்டி பேப்பருக்கு கிரிப்பாக வைத்து எளிதாக க்வில்லிங் செய்யலாம்னு சொன்னாங்க . அதே முறையை பின்பற்றி நான் செய்த அன்னப்பறவை. நன்றி ஏஜ்சலின்... :)


Read More...

குந்தன் கோலம்

12 comments
அட்டையில் கோலம் வரைந்து பெவிகால் வைத்து குந்தன் கற்களை  கலர் கலராக ஓட்டினால் குந்தன் கோலம் ரெடி. இதை கற்பனைக்கு ஏற்றவாறு வரைந்து ஒட்டி பூஜை அறையில் வைக்கலாம். சுவர் அலங்காரமாக மாட்டலாம். பிரியமானவர்களுக்கு பரிசாக தரலாம். ஒரே கோலத்தை 5,6, எண்ணிக்கையில் செய்து அதை அளவில் பெரிய அட்டையில் நம் கற்பனைக்கு ஏற்றவாறு பெரிய கோலமாக ஒட்டி விழா காலங்களில் பயன் படுத்தலாம். நான் இதில் சுற்றிலும் கிளிட்டர் பேப்பரை ஒட்டி அலங்கரித்துள்ளேன்.

Read More...

வெள்ளை புலாவ்

19 comments
தேவையான பொருட்கள்:-
  • அரிசி - 500 கிராம்
  • தயிர் - 100 கிராம்
  • சின்ன வெங்காயம் - 20
  • புதினா இலை - ஒரு கைபிடி (ஆய்ந்தது)
  • பட்டை - ஒன்று
  • கிராம்பு - 3
  • அன்னாசி பூ - 2
  • பிரிஞ்சி இல்லை - 1
  • ஏலக்காய் - 2
  • இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
  • நெய் - 50 கிராம்
  • முந்திரி - 10 கிராம்
  • பச்சை மிளகாய் - 5
  • தேங்காய் பால் - 100 மில்லி
செய்முறை:-
  • அரிசியை நன்றாக கழுவி 10நிமிடம் ஊறவிடவேண்டும்.
  • குக்கரை அடுப்பில் வைத்து நெய்யை ஊற்றி காய்ந்த உடன் பட்டை, கிராம்பு, அன்னாசிபூ, பிரிஞ்சி இலை, நசுக்கிய ஏலக்காய், போட்டு வதக்க வேண்டும்.
  • அடுத்து சின்ன வெங்காயம், வெட்டிய பச்சை மிளகாய்,போட்டு வதக்கி பின் இஞ்சி,பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.
  • இதனுடன் தயிரையும், தேங்காய் பாலையும் சேர்த்து நன்றாக கலக்கி விட்டு புதினா இலைகளை போட்டு 500கிராம் அரிசிக்கு தேவையான நீரை (4 டம்ளர் ) விட்டு சிறிது உப்பு சேர்த்து கொதித்த  பின் அரிசியை போட்டு குக்கரை மூடி 3 விசில் வந்த உடன் இறக்கி விட வேண்டும்.
  • 5 நிமிடம் கழித்து குக்கரை திறந்து சிறிது நெய்யில் முந்திரியை போட்டு வறுத்து புலாவில் கொட்டி கிளறி விட வெள்ளை புலாவ் தயார்.
  • குருமா, ரெய்தா உடன் பரிமாற சுவையாக இருக்கும்.
Read More...

கார் ஹேங்கிங்

13 comments
எப்பொழுதோ வாங்கிய உல்லன் நூல், பாசி, ஜமிக்கி அனைத்தும் உபயோகிக்காமல்... உபயோகிக்காமல் என்ன கிராப்ட் ஒர்க் செய்ய நேரம் இல்லாமல் இன்று திடீர்னு ஐடியா வந்தது.. முன்பு பெரிய 2 லிட்டர் பாட்டிலில் wind chime செய்து பார்த்தேன்.. அது பாசி மணி வெயிட் தாங்காமல் கீழ் நோக்கி ரொம்ப இழுத்ததால் பாதியிலே முடிக்காமல் விட்டுவிட்டேன். இன்று குட்டியூண்டு பாட்டில் கண்ணில் பட கார் ஹேங்கிங் செய்து பார்த்தேன். அரை மணி நேரத்தில் முடித்தாயிற்று.
தேவையான பொருட்கள் :-
  • குட்டி பிளாஸ்டிக் பாட்டில் - 1
  • கிரிஸ்டல் பாசி - ஏதாவது இரண்டு கலர்
  • பிளாஸ்டிக் பூ - 10
  • சிஷர் - 1
  • வயர் - ஒரு ரோல்
  • ஊசி - 1
  • உல்லன் பாம் பாம் - ஒன்று (சிறிதாக செய்தது )
Read More...

தயிர் வடை

8 comments
தேவையான பொருட்கள் :-
வடை செய்ய :-
  • உளுந்து - 100 கிராம்
  • மிளகு - அரை ஸ்பூன்
  • உப்பு - சிறிது
  • தயிர் - 300 மில்லி
மிக்ஸர் செய்ய :-
  • கடலை மாவு - 100கிராம்
  • அரிசி மாவு - 3 ஸ்பூன்
  • பெருங்காய பொடி - சிறிது
  • உப்பு - சிறிது
  • கடலை பருப்பு - 50 கிராம்
  • கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  • மல்லி தழை - சிறிது
  • மிளகாய் பொடி - 1 ஸ்பூன்
செய்முறை :-
  • கடலை பருப்பை கழுவி விட்டு நீரில் அரை மணி நேரம் ஊற விட வேண்டும்.
  • கடலை மாவு, அரிசிமாவு இரண்டையும் ஒன்றாக கலந்து அதில் உப்பு, பெருங்காயம் சேர்த்து சிறிது நீர் விட்டு கட்டியாக முறுக்கு மாவு பதத்தில் முதலில் பிசைய வேண்டும்.
  • அதை ஓமப்பொடி அச்சில் போட்டு சூடான எண்ணெய்யில் பிழிய வேண்டும்.
  • பாதி மாவு பிழிந்த உடன் மீதி மாவில் மேலும் சிறிது நீர் சேர்த்து தளர கரைத்து சூடான எண்ணெய்யில் பூந்தி கரண்டியை வைத்து மாவை தேய்த்து கார பூந்தியாக எடுக்க வேண்டும்.
  • அதே சூடான எண்ணெய்யில் ஊறிய கடலை பருப்பை போட்டு கோல்டன் கலர் வந்தஉடன் எடுத்து ஓமப்பொடி, காரபூந்தியில் போட்டு கருவேப்பிலையையும் எண்ணெய்யில் போட்டு முறுகலாக எடுத்து இதனுடன் சேர்க்க வேண்டும்.
  • இறுதியில் அனைத்தையும் ஒரு சேர கைகளால் பிசைந்து நொறுக்கினால் மிக்சர் தயார்.
  • வடை செய்ய ஊறிய உளுந்தை நைஸாக அரைத்து அதனுடன் உப்பையும், தூளாக்கிய மிளகையும் சேர்த்து பிசைந்து வடைகளாக எண்ணெய்யில் சுட்டு எடுக்க வேண்டும்.
  • பரிமாறும் பொழுது தட்டில் இரண்டு வடைகளை வைத்து அதன் மேல் 4 கரண்டி தயிரை ஊற்றி மிக்சரை அதன் மேல் வைத்து மிளகாய் பொடி தூவி சிறிது மில்லி இலைகளை பொடியாக நறுக்கி மேலே வைத்து பரிமாற வேண்டும்.
  • தயிர் வடை தயார்.
Read More...

அவல் கொழுக்கட்டை

17 comments
கொழுக்கட்டை பிள்ளையாருக்கு ரொம்ப பிடித்தமான நைவேத்யம். அதை பல விதத்துல செய்து பல பெயரும் வைப்பாங்க. சின்ன வயசுல கொழுக்கட்டையை பத்தி ஒரு பாட்டு நாம எல்லாம் கேள்வி பட்டிருப்போம்.
சின்ன பிள்ளைங்க இந்த பாட்டை பாடிக்கிட்டே விளையாடுவாங்க.. அந்த பாட்டு..
மா கொழுக்கட்டை
மஞ்ச கொழுக்கட்டை
மாமியார் தந்தார்
பிடி கொழுக்கட்டை
அத்தை தந்தார்
அவல் கொழுக்கட்டை
விநாயகர் சதுர்த்திக்கு பண்ணிய கொழுக்கட்டையை போட்டோ எடுத்து வைத்தாச்சு. ஆனா எழுத தட்டினது அரை குறையா முடிக்க முடியாம தள்ளி போய்கிட்டே இருந்தது. இன்னிக்கு முழுசும் முடித்து கொழுக்கட்டை பதிவை தேத்தியாச்சு..:)
தேவையான பொருட்கள் :-
  • அவல்                     - கால் கிலோ
  • பிட்டரிசி மாவு     - 100 கிராம் 
  • நெய்                       - 1 ஸ்பூன் 
  • வெல்லம்               - 200 கிராம் 
  • தேங்காய் துருவல் - சிறிது 
செய்முறை :-
  • அவலை சுத்தம் செய்து தண்ணீரில் நன்றாக கழுவி வடிகட்டி 10 நிமிடம் ஊற வைத்து தனியாக எடுத்து வைக்க வேண்டும்.
  • ஒரு பாத்திரத்தில் ஊறிய அவல்,பிட்டரிசி மாவு , நெய்,தேங்காய் துருவல் அனைத்தையும் போட்டு ரெடியாக வைக்க வேண்டும்.
  • வெல்லத்தை முழ்கும் அளவு தண்ணீர் விட்டு வெல்லம் கரையும் வரை பாகு வைத்து வடிகட்டி மீண்டும் காய்ச்சி இறக்க வேண்டும்.
  • வெல்ல கரைசலை பாத்திரத்தில் உள்ள அவல் கலவையில் ஊற்றி கரண்டி வைத்து கிளற வேண்டும்.
  • கட்டியாக கிளறிய அவல் கலவையை கொலுகட்டைகளாக பிடித்து ஆவியில் வேக வைத்து எடுக்க வேண்டும்.
  • அவல் கொழுக்கட்டை தயார்.
Read More...

தலைமுறை பேசும் பொக்கிஷம்

22 comments


தோழி ஷாதிகாவின் தொடர் பதிவை படித்து எனது கருத்தை பகிர்ந்ததில் ஸாதிகாவும் எனது கருத்தை படித்துவிட்டு என்னை இப்பதிவை எழுத தூண்டினார்.


என்னிடம் பொக்கிஷமாக பாதுகாக்க படும் பொருட்களில் இப்பொழுதும் உபயோகத்தில் இருப்பது இந்த சிணுக்கோலி.. செவ்வாய், வெள்ளிகளில் தலை குளித்து சிக்கு எடுப்பது இன்றும் இந்த சிணுக்கோலியால்தான். இதன் வயது 150க்கு மேல் இருக்கும். நான் 7 வயது சிறுமியாக இருந்த போது எனது தாத்தாவின் அம்மா இருந்தார்கள். அப்பொழுது அவர்கள் வயது 100 ஐ நெருங்கும் சமயம். அந்த பாட்டி இறந்தது எனக்கு லேசாக நினைவில் இருக்கின்றது. அந்த பாட்டி பயன்படுத்திய இந்த வெள்ளி சிணுக்கோலி 3 தலைமுறை கடந்து இப்பொழுது என்னிடம் உள்ளது.


சங்கு இதுவும் பாட்டி பயன்படுத்தியதுதான்.அன்று பாட்டி பூஜையில் வைத்து வணங்கிய சங்கு இன்று பாட்டியின் நினைவாக என் வீட்டு பூஜை அறையில் உள்ளது.


சின்ன டப்பா...இது என் அம்மாவின் அப்பா உபயோக படுத்தியது. இந்த டப்பா தாத்தாவின் ஞாபகமாக சும்மா வைத்துள்ளேன் . காரணம் இந்த டப்பா இந்திய சுதந்திரத்துக்கு முன் வெள்ளையன் ஆட்சியில் விற்பனைக்கு வந்த ஷேவிங் க்ரீம் டப்பா.. அந்த காலத்தில் க்ரீம்மாக இல்லாமல் கட்டி சோப்பாக வந்ததாம்.
இந்த தாத்தாவை பற்றி அக்கறை பச்சை பதிவில் எழுதியுள்ளேன்.


அழகிய கும்பா..இது அம்மாவின் அம்மா  வழி வந்தது. அந்த பாட்டி இந்த கும்பாவை அம்மாவிற்கு கொடுக்க அம்மா அதை அழகுக்காக எதற்கும் பயன்படுத்தாமல் பத்திரமாக வைத்திருந்தார்கள். இப்பொழுது நான் இதை ஷோகேஷில் அழகுக்காக வைத்துள்ளேன்.


போட்டோ.. சமீபத்தில் தான் என் மகன் இந்த போட்டோவை இரு தலைமுறைகள் உள்ள போட்டோ இது, எனக்கு வேண்டும் என்று அம்மா வீட்டில் இருந்து எடுத்து வந்தது. எனது அம்மா ,அப்பாவின் கல்யாண போட்டோ.


திருக்கை.. திருகைன்னும் சொல்லுவாங்க. வரும்  தலைமுறையினருக்கு இதன் பயன் பாடே தெரியாமல் போகலாம். பல வருடங்களாக பயன் படுத்தாமல் இருந்த இதை அம்மாவிடம் இருந்து நான் வாங்கி பயன் படுத்தாமல் பழைய பொருட்களின் நினைவு சின்னமாக வைத்துள்ளேன்.
Read More...