மாவு சட்னி

15 comments
                 பொதுவா சட்னினா,மனசுல நிக்கறது  தேங்காய் சட்னி,பொரிகடலை சட்னிதான் ஆனா கிராமத்து ஜனங்கள் மத்தியில இந்த சட்னிஎல்லாம் ஓரங் கட்ற மாதிரி ஒரு சட்னி செய்வாங்க..மாவுச்சட்னி .ஒரு ஆச்சி இந்த சட்னிய பண்ணாங்க .எங்கூர்ல ஹோட்டல்ல பஜ்ஜியோட இந்த சட்னிய வச்சு தர்ராங்க..இந்த சட்னி ருசியா வரணும்னா மாவு புளிப்பா இருக்கணும்.வெங்காய வடகத்த வச்சி பண்ணினா இன்னும் நல்லா இருக்கும்.முக்கியமா காரம்அதிகம் சேர்த்தால் மாவோட புளிப்பும் இந்த காரமும் சேர்ந்து சூப்பர் டேஸ்ட்...
தேவையானவை:-
  • இட்லி மாவு                                                     -    ஒரு குழி கரண்டி 
  • வெங்காயம் (or) வெங்காய வடகம்          - சிறிது 
  • மிளகாய் வத்தல்                                           - எட்டு 
  • தேங்காய்                                                          -இரண்டு துண்டு 
  • எண்ணெய்                                                       -ஒரு குழி கரண்டி 
  • கருவேப்பிலை                                              - சிறிது 
  • கடுகு ,உளுந்து                                               - ஒரு ஸ்பூன் 
  • உப்பு                                                                    - சிறிது 
செய்முறை:-
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும்.
  • மிக்சியில் தேங்காய்,வத்தல் இரண்டையும் போட்டு நன்றாக அரைத்து எடுக்க வேண்டும்.
  • மாவை நீர் சேர்த்து கரைத்து கொள்ளவேண்டும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து போட்டு வெடித்த உடன் வெங்காய வடகம் இல்லையென்றால் வெங்காயத்தை போட்டு ,கருவேப்பிலையும் போட்டு முறுகலாக வரும்வரை வதக்கி மிக்சியில் உள்ள கலவையை போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
  • கொதித்து  வரும்பொழுது   கரைத்து வைத்திருக்கும் மாவை ஊற்றி சிறிது உப்பு சேர்க்கவேண்டும்.

    • கலவை நன்றாக கொதித்து வரும்பொழுது இறக்கிவிடவேண்டும்.

      பி.கு:-வெங்காயமோ ,வடகமோ ,நன்றாக முறுகல் ஆன பின்பே  மிக்சியில் உள்ள விழுதை சேர்க்க வேண்டும்.
      Read More...

      காரச்சட்னி

      6 comments
                 இட்லிக்கு பொதுவா எல்லாரும் பொரிகடலை சட்னியும்,சாம்பாரும்,வச்சு சாப்பிடுவாங்க..ஆனா எங்க வீட்ல எல்லாருமே பொரிகடலை சட்னியோட   இந்த காரச்சட்னி  செஞ்சு வச்சா சாம்பாரைவிட காரச்சட்னியத்தான் விரும்புவாங்க...இட்லியும் மிச்சமில்லாம காலியாயிடும்.காரப்பிரியர்கள் எல்லாருக்கும் இந்த சட்னி ரொம்ப பிடிக்கும்.
      தேவையான பொருட்கள்:-
      • மிளகாய் வத்தல்                 - 15
      • புளி                                            - நெல்லிகாய் அளவு 
      • பூண்டு                                       -எட்டு 
      • சின்ன வெங்காயம்             - பத்து
      • உப்பு                                          - சிறிது 
      • கருவேப்பிலை                    - மூன்று ஆர்க்கு 
      • உளுந்து                                   - இரண்டு ஸ்பூன் 
      • எண்ணெய்                             -  சிறிது 

      செய்முறை:-
      • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி அதில் உளுந்தை போட்டு வறுக்க வேண்டும்.
      • உளுந்து கலர் மாறும் பொழுது மற்ற பொருட்கள் அனைத்தையும் போட்டு வதக்க வேண்டும்.

      • மிக்சியில் வதக்கிய பொருட்களை போட்டு உப்பை  சேர்த்து அரைக்க வேண்டும்.
      • அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் எடுத்து எண்ணெய்யில் கடுகு,உளுந்து  தாளித்து சேர்க்க வேண்டும்.

      Read More...

      பிரண்டை துவையல்:-

      12 comments
                             ரெண்டு மாசமா தேடி தேடி ஒரு வழியா கண்டுபிடிச்சாச்சு...என்னனு கேட்கிறிங்களா ...அதாங்க நம்ம நாட்டு மூலிகை பிரண்டைச்செடி.10 வருசத்திற்கு முன்னே இந்த செடிய  சாதாரணமா பாக்க முடிந்தது..இப்ப இதுவும் அபூர்வமாகிபோச்சு.நல்லா பசியை தூண்டுற சக்தி இந்த செடிக்கு இருக்கு .வாந்தி வரும் உணர்வு,அடிக்கடி ஏப்பம் விடுவது, இந்த தொல்லையெல்லாம் பிரண்டை துவையல் செய்து சாப்பிட்டால் பறந்து போயிடும்.
       தேவையான பொருட்கள்:-
      • பிரண்டை                        - சிறிது
      • மிளகாய் வற்றல்         - எட்டு  
      •  புளி                                   - கொட்டையளவு 
      • தேங்காய்                      - சிறிது 
      • கருவேப்பிலை            -சிறிது
      • பெருங்காயம்              -ஒரு சிட்டிகை
      • உப்பு                                -சிறிது
      •  எண்ணெய்                 - மூன்று ஸ்பூன்
      செய்முறை:-
      • பிரண்டையை சுத்தம் செய்து வென்னீரில் இரண்டுநிமிடம் போட்டு எடுத்து தண்ணீரை நன்கு வடிய விட வேண்டும்.
      • வாணலியை அடுப்பில் வைத்து  சிறிது எண்ணெய் விட்டு காய்ந்த உடன் பிரண்டையை அதில் போட்டு வதக்கவேண்டும். 
      • நன்கு வதக்கிய உடன் அதனுடன் வத்தல்,புளி,தேங்காய், அனைத்தையும் சேர்த்து வதக்கி எடுக்க வேண்டும்.

      • மிக்சியில் வதக்கிய பொருட்களுடன் உப்பு,பெருங்காயம் சேர்த்து அரைக்கவேண்டும்.
      • ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுதை கொட்டி சிறிது எண்ணெய்யில்  கடுகு,உளுந்து,கருவேப்பிலை தாளித்து ஊற்றவேண்டும்.
              பி.கு:- பிரண்டையை நன்கு வதக்கவில்லை என்றால் நாக்கு அரிப்பு எடுத்துவிடும்.          
      Read More...

      தூள் பஜ்ஜி

      2 comments

      தேவையான பொருட்கள்:-

      • கடலை மாவு                           - நூறு கிராம்
      • கார்ன் ப்ளார்                             - 2  ஸ்பூன்
      • வெங்காயம்                               - கால் கிலோ
      • இஞ்சி                                           - விரலளவு
      • பச்சை மிளகாய்                      - 5
      • பூண்டு                                          - 5 பல் 
      • உப்பு                                              - தேவையான அளவு
      • கேசரி கலர்                               - சிறிது
      • எண்ணெய்                                  - தேவையான அளவு


      செய்முறை:-

      • ஒரு பாத்திரத்தில் வெங்காயம் உப்பை போட்டு நன்கு பிசறி,கடலை மாவு,கேசரி கலரை அதனுடன் போட்டு பிசைந்து கொள்ளவேண்டும்.
      • இஞ்சி,பூண்டு,பச்சைமிளகாய்,இவற்றை விழுதாக அரைக்க வேண்டும்.
      • அரைத்த விழுதை மாவு கலவையுடன் போட்டு பிசைந்து கொள்ளவேண்டும்.
      • வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி நன்கு சூடானவுடன் மாவை சிறிது சிறிதாக போட்டு எடுத்து மொறு மொறுப்பாக வெந்தவுடன் ஒரு தட்டில் எண்ணெயை நன்கு வடித்து விட்டு எடுக்க வேண்டும்.

      Read More...

      குக்கர் அல்வா

      14 comments
                          அல்வா செய்வதற்கு கோதுமையை ஊறவைத்து அரைத்து பால் எடுத்து செய்வதற்கு நேரமாகும். கோதுமை மாவிலேயே இப்படி செய்தால் எளிதாக இருக்கிறதென்று  நான் இந்த முறையில்தான் செய்வேன்.நெய் அதிகமாக சேர்த்தால் கொலஸ்ட்ரால் பிராப்ளம் வரும். ஆலிவ் ஆயில் நல்லது,வாசனைக்காக சிறிது நெய் சேர்த்து செய்தேன்.வாங்க!அல்வா சாப்பிடுங்க.:-)

      தேவையான  பொருட்கள்:-
      கோதுமை மாவு           - ஒரு கப்
      சீனி                                    - 2 கப்
      கேசரி கலர்                   - சிறிது 
      முந்திரி                            - 50 கிராம்
      ஆலிவ் ஆயில்           - ஒரு கப் + 2 ஸ்பூன் நெய்


      செய்முறை:-
      • ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு சிறிது தண்ணீர் விட்டு கரைத்து கொள்ள வேண்டும்.
      • குக்கரில் சிறிது தண்ணீர் விட்டு அதனுள்  மாவு பாத்திரத்தை வைத்து மூடி மாவை வேகவிட வேண்டும்.
      • ஒரு விசில் சத்தம் வந்த உடன் இறக்கி மாவை வெளியே எடுத்து ஆறவிட வேண்டும்
      •  ஆறியமாவை மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவேண்டும்.


      •  வாணலியை அடுப்பில் வைத்து அரை டம்ளர் தண்ணீருடன் கேசரிகலர் கலந்து சீனியை சேர்த்து கரையவிட்டு அதனுடன் மிக்சியில் உள்ள மாவை போட்டு நன்றாக கிளற வேண்டும்.  
      •  பக்கத்து அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து ஆலிவ் ஆயில்,நெய் ஊற்றி சூடுபண்ணி,அல்வா கிளறி முடியும்வரை சூடாக இருக்கும்மாறு அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும்.

      • மாவு லேசாக கெட்டி படும் போது கொதிக்கும் எண்ணெய்யை ஒரு கரண்டியால் எடுத்து மாவின் மேல் ஊற்றி கிளற வேண்டும்.
      • எண்ணெய்யை ஊற்றி கிளற கிளற மாவு எண்ணெய்யை உள்வாங்கும்.
      • அப்பொழுது மாவும் தளதள வென்று பாத்திரத்தில் ஒட்டாமல் கலர் மாறி பளபளப்பாக வரும்.
      • கடைசி கரண்டி எண்ணெய்யை விடும் பொழுது மாவு எண்ணெய்யை உள்வாங்கி கிளற கிளற இரண்டு நிமிடத்தில்மாவிலிருந்து  எண்ணெய் பிரிந்து வரும்.
      • இந்த பக்குவம் வந்த உடன் வாணலியை அடுப்பில் இருந்து இறக்கிநெய்யில் வறுத்த முந்திரியை சேர்த்து கிளறி  விட வேண்டும்.

      Read More...

      முந்திரி பிஸ்கட்

      7 comments

       தேவையான பொருட்கள்:-
      • முட்டை வெள்ளை கரு     - 3
      • முந்திரி                                    - 25   கிராம்                   
      • சீனி                                           - 50 கிராம்
      • கோதுமை மாவு                - 100 கிராம்
      • வெனிலா எசன்ஸ்          2 துளி
      • பட்டர்                               - சிறிது
      செய்முறை:-
      •     முட்டையை உடைத்து வெள்ளை கருவை மட்டும் தனியே ஒரு பாத்திரத்தில் எடுத்து நுரை வர நன்கு அடித்து பட்டர்,சீனி ,எசன்ஸ்  இவற்றை முட்டையுடன் சேர்த்து நன்றாக கலந்து பொடித்த முந்திரி ,கோதுமை மாவை இதனுடன் கலந்து வெண்ணை தடவிய தட்டில் மாவுக்கலவையை ஒரு ஸ்பூனால் சிறு சிறு வட்டமாக ஊற்றி அவனில் 200  டிகிரி  பாரன்ஹீட்டில் 15 நிமிடங்கள்  வைத்து எடுக்க வேண்டும்.
      Read More...

      ஸ்டஃப்ட் உருண்டை குழம்பு

      Leave a Comment
      தேவையான பொருட்கள்:-         
      • கடலை பருப்பு        - 2கப்        
      • காலிபிளவர்           - சிறிய பூ                                        
      • கார்ன்ப்ளார்           - 3 ஸ்பூன்
      • பனீர்               - 1/2 கப்
      • உப்பு               - சிறிது
      • வெங்காயம்          - 10
      • பூண்டு              - 8 இதழ்கள்
      • தக்காளி            - 2      
      • பெருஞ்சீரகம்        - 1ஸ்பூன்
      • இஞ்சி               - சிறு துண்டு
      • மிளகாய் பொடி       - 1 ஸ்பூன்
      • தேங்காய்         - 1/4 மூடி
      • கரம் மசாலா பொடி - 2ஸ்பூன்
      • எண்ணெய்            - 2 குழி கரண்டி
      • எண்ணெய்             - பொரிக்க தேவையான அளவு
      • கடுகு,உளுந்து    -சிறிது      
         செய்முறை:-

        •  ஒரு மணி நேரம் கடலை பருப்பை ஊற  வைக்க வேண்டும்.
        • காலிபிளவரை மிக பொடிதாக நறுக்கி கொள்ள வேண்டும்.
        • . நறுக்கிய காலிபிளவரை வெதுவெதுப்பான நீரில் போட்டு நீரை நன்றாக வடிய விட வேண்டு   மிக்சியில் கடலை பருப்பை நீரை வடித்து விட்டு போட்டு உப்பு,பெருஞ்சிரகம்,பூண்டு,சேர்த்து கொர கொரப்பாகவும் இல்லாமல் வழுவழுப்பாகவும் இல்லாமல் மீடியமாக  அரைக்க வேண்டும். 
        • இதனுடன் காலிபிளவரை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.
        •   இந்த கலவையில் கார்ன்  .பிளாரை சேர்த்து பிசைய வேண்டும்.
        • பிசைந்த கலவையை உருண்டையாக உருட்டி நடுவில் ஒரு  குழி செய்து 
        . பனிரை அதில் வைத்து ஸ்டப் செய்ய வேண்டும்.
        •   இதே போல் கலவை முழுவதையும் செய்து எண்ணையில் பொரித்து எடுக்க வேண்டும்.
        • .,  மிக்சியில் தேங்காய்,பெருஞ்சீரகம்,பூண்டு,இஞ்சி,அனைத்தையும் போட்டு அரைக்கவேண்டும்.    
        • வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடானதும் கடுகு,உளுந்து போட்டு தாளித்து வெங்காயம்,தக்காளி போட்டு வதக்கி ,உடன் கரம்மசாலா சேர்த்து வதக்கி ஒரு நிமிடம் நன்றாக பிரட்டி விட்டு மிக்சியீல் அரைத்த விழுதை போட்டு சிறிது உப்புடன் தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும்.
        • நன்றாக கொதித்து வரும் பொழுது எண்ணெயில் பொறித்த உருண்டைகளை போட்டு கிளறி மல்லி தழை தூவி இறக்கி விட வேண்டும்.




        Read More...