சமையல் தெரியாத சில பெண்களிடம் நல்லா சமைப்பியா எனக்கேட்டால் ஓ..வென்னீர் எல்லாம் சூப்பரா வைப்பேன் என நகைசுவையாக கூறுவார்கள்.ஆனால் அந்த வெந்நீரின் மகத்துவம் பலரும் அறிந்திருப்பார்களா..
வெந்நீரின் மகத்துவம்:-
- வெந்நீர் தினமும் பருகினால் ரத்த ஓட்டம் சீராகும்.கொழுப்பின் அளவு குறையும்.
- சளி,ஈஸினோபீலியா தொந்தரவு உள்ளவர்கள் தினம் வெந்நீர் பருகி வர நலம் காணுவார்கள்.
- டான்சில்ஸ் உள்ளவர்கள் தவிர்க்க முடியாமல் ஐஸ் கிரீம்,குளிர்பானம் சாப்பிட்டால் சாப்பிட்ட உடனே வெந்நீரை குடித்தால் தொந்தரவு இருக்காது.
- நகக்கண்களில் பூஞ்சை தொற்று இருந்தால் வெந்நீரில் படிகாரத்தை கரைத்து அதில் கைகளை 10நிமிடம் அமிழ்த்து வைத்து எடுக்க நோய் தீரும்.(சுமார் ஒரு வாரம் )
- வெந்நீரில் தேனை கலந்து பருக உடல் பருமன் குறையும்.(1 டம்ளர் வெந்நீர் +1 ஸ்பூன் தேன் )
- சிறந்த மலமிலக்கியாக வெந்நீர் செயல்படுகிறது. காலை எழுந்த உடன் 2 டம்ளர் வெந்நீர் பருகி சிறிது நடை பயின்றால் மலம் எளிதாக வெளியேறும்.
- வெந்நீரில் சிறிது உப்பை போட்டு கரைத்து தொண்டையில் படுமாறு கவனமாக விழுங்கி விடாமல் gargle செய்தால் தொண்டைப்புண், தொற்று ,முதலியவை குணமாகும்.
- கடின உழைப்பால் உடல் வலி எடுத்தவர்கள் வெந்நீரில் யூகலிப்டஸ் ஆயிலை சிறிது விட்டு குளித்தால் உடல் வலி தீரும்.
- நன்றாக கொதித்த வெந்நீரில் சிறிது மஞ்சள் தூளை போட்டு வெளியேறும் நீராவியை இன்ஹேல் செய்தால் ஜலதோஷத்திற்கு நல்ல நிவாரணம்.
- வெயிலில் அலைந்து விட்டு தாகத்திற்காக தண்ணீர் அருந்த குளிர் நீரை அருந்தாமல் சிறிது வெந்நீரை அருந்தினால் தாகம் தீரும்.குளிர் நீரை பருகினால் இதமாக இருக்கும்...ஆனால் தாகம் தீர்ந்த உடன் சிறிது நேரத்தில் ஜலதோஷம்,தலைவலிக்கு மருந்தை தேட வேண்டி வரும் .
- சுளுக்கு விழுந்த இடத்தில் நல்லெண்ணெய் தடவி நீவி விட்டு வெந்நீரினால் ஒற்றடம் கொடுத்து பின் வெந்நீரை கொண்டு சுளுக்கு விழுந்த இடத்தில் ஊற்றி கழுவ சுளுக்கு சரியாகும்.