தேவையான பொருட்கள் :-
- கடலை பருப்பு - 200 கிராம்
- பச்சரிசி - ஒரு கைபிடி
- வெங்காயம் - பெரியது ஒன்று
- பொன்னாங்கன்னி கீரை - ஒரு கட்டு
- மிளகாய் பொடி - 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :-
- கடலை பருப்பையும் பச்சரிசியையும் நன்றாக கழுவி அரை மணி நேரம்ஊற விட வேண்டும்.
- ஊறிய அரிசியையும் பருப்பையும் தண்ணீரை வடித்து விட்டு மிக்சியில் உப்பு சேர்த்து அரைக்க வேண்டும்.
- அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம்,பொன்னாங்கன்னி கீரை,மிளகாய் பொடி இவைகளை விழுதுடன் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.
- வாணலியை அடுப்பில் வைத்து தேவையான எண்ணெயை ஊற்றி சூடாக்க வேண்டும்.
- சூடான எண்ணெயில் வடை மாவை தட்டையாக தட்டி போட்டு முறுகலாக வந்த உடன் எடுத்து தட்டில் போடவேண்டும்.
Read More...
தேவையான பொருட்கள்:-
- அவல் - 1கப்
- உருளை கிழங்கு - 2
- காரட் - 1
- மல்லி இலை - சிறிது
- பிரட் - 3
- உப்பு - சிறிது
- மிளகாய் பொடி - 1 ஸ்பூன்
- பூண்டு - 5 இதழ்
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:-
- உருளைகிழங்கை நன்கு வேக வைத்து கொள்ளவேண்டும்.காரட்டை துருவி கொள்ளவேண்டும்.
- அவலை கழுவி வடித்து கொள்ளவேண்டும்.
- பிரட் துண்டுகளை மிக்சியில் தூளாக்கி கொள்ளவேண்டும்.
- ஒரு பாத்திரத்தில் கழுவிய அவல் வேக வைத்த கிழங்கை சேர்த்து உப்புடன் பிசைந்து அதனுடன் துருவிய காரட்,பொடியாக நறுக்கிய மல்லி இலை,பொடியாக நறுக்கிய பூண்டு இவைகளையும் சேர்த்து பிசைந்து கொள்ளவேண்டும்.
- அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.
- பிசைந்த மாவில் சிறிது எடுத்து உருண்டையாக்கி தட்டையாக தட்டி அதை பிரட் தூளில் பிரட்டி எடுத்து காய்ந்த எண்ணெயில் போட்டு முறுகலாக வந்த உடன் எண்ணெய்யை வடித்து தட்டில் போட வேண்டும்.
- அவல் கட்லட் தயார்...
- இதை சூடாக தக்காளி சாஸ் உடன்,மல்லி சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
Read More...
தேவையான பொருட்கள்
- எலும்பு இல்லாத சிக்கன் - அரை கிலோ
- புதினா இலைகள் - இரண்டு கைப்பிடி
- பூண்டு - 10 இதழ்கள்
- இஞ்சி - சிறிது
- பச்சை மிளகாய் - 3
- பட்டை - சிறிது
- கார்ன் ப்ளார் - இரண்டு ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 250 மில்லி
செய்முறை
- சிக்கனை நன்கு கழுவி வடித்து ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவேண்டும்.
- மிக்சியில் புதினாஇலைகள்,மிளகாய்,பட்டை,இஞ்சி,பூண்டு,இவைகளை போட்டு அரைத்து எடுக்க வேண்டும்.
- அரைத்த விழுதை சிக்கன் மேல் போட்டு அதனுடன் கார்ன் ப்ளார்,உப்பை சேர்த்து பிசற வேண்டும்.
- அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய்யை ஊற்றி காய்ந்தவுடன் சிக்கனை சிறிது சிறிதாக எண்ணெயில் போட்டு முறுகலாக வந்தவுடன் எடுத்து ஒரு தட்டில் போட வேண்டும்.
- சிக்கன் வறுவலில் தேவைப்பட்டால் மிளகு பொடி,எலுமிச்சை 2 துளி சேர்த்து கொள்ளலாம்.
Read More...
தேவையான பொருட்கள்:-
- வெள்ளரிகாய் - கால் கிலோ
- எலுமிச்சம் பழம் - பெரியது ஒன்று
- மிளகாய் பொடி - 2 ஸ்பூன்
- உப்பு - 2ஸ்பூன்
செய்முறை:-
- வெள்ளரி காய்களை நன்கு கழுவி ஈரம் போக துடைக்க வேண்டும்.
- ஒரு பாத்திரத்தில் வெள்ளரியை நீள நீளமாக வெட்டி போட வேண்டும்.
- வெட்டிய காயின் மேல் மிளகாய் பொடி உப்பை போட்டு அதன் மேல் எலுமிச்சையை பிழிந்து நன்றாக குலுக்கி விட வேண்டும்.
- 5 நிமிடத்தில் நீர் விட ஆரம்பிக்கும்.அரை மணி நேரம் கழித்து நன்றாக பிரட்டி விட்டு ஈரமில்லாத பாட்டிலில் எடுத்து வைக்க வேண்டும்.
- இது 2 வாரத்திற்கு நன்றாக இருக்கும். நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க வினிகர் சேர்த்து கொள்ளவேண்டும்.
Read More...