தேவையான பொருட்கள் :-
- மைதா மாவு - அரை கிலோ
- சோடா உப்பு - சிறிது
- உப்பு - தேவையான அளவு
- பொட்டுகடலை - 200 கிராம்
- சர்க்கரை - 200 கிராம்
- வறுத்த வெள்ளை எள் - 50 கிராம்
- ஏலக்காய் - 4
செய்முறை :-
- சிறிது நீரில் உப்பையும் சோடா உப்பையும் கலந்து மைதாவில் சிறிது சிறிதாக ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
- பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும்.
- மிக்சியில் பொட்டு கடலையை போட்டு மாவாக திரித்து வைக்க வேண்டும்.
- பொட்டு கடலை மாவுடன் சர்க்கரை,வறுத்த எள்,பொடித்த ஏலக்காய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
- அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் வட்டமாக தேய்த்த மாவை போட்டு பூரிகளாக சுட்டு எடுக்க வேண்டும்.
- பூரி சூடாக இருக்கும் போதே அதன் நடுவில் பொட்டுகடலை மாவு கலவையை பரவலாக வைத்து சுருட்டி வைக்க வேண்டும்.
- சுருள் போளி தயார்.