கீரை வடை

22 comments
தேவையான பொருட்கள் :-
  • கடலை பருப்பு               - 200 கிராம்
  •  பச்சரிசி                      - ஒரு கைபிடி
  • வெங்காயம்                 - பெரியது ஒன்று
  • பொன்னாங்கன்னி கீரை    - ஒரு கட்டு 
  • மிளகாய் பொடி             - 1 ஸ்பூன் 
  • உப்பு                        -  தேவையான அளவு
  • எண்ணெய்                 - தேவையான அளவு
செய்முறை :-
  • கடலை பருப்பையும் பச்சரிசியையும் நன்றாக கழுவி அரை மணி நேரம்ஊற விட வேண்டும்.
  • ஊறிய அரிசியையும் பருப்பையும் தண்ணீரை வடித்து விட்டு மிக்சியில் உப்பு சேர்த்து அரைக்க வேண்டும்.
  • அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம்,பொன்னாங்கன்னி கீரை,மிளகாய் பொடி இவைகளை விழுதுடன் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.
  • வாணலியை அடுப்பில் வைத்து தேவையான எண்ணெயை ஊற்றி சூடாக்க வேண்டும்.
  • சூடான எண்ணெயில் வடை மாவை தட்டையாக தட்டி போட்டு முறுகலாக வந்த உடன் எடுத்து தட்டில் போடவேண்டும்.
  • கீரை வடை தயார்.
Read More...

அவல் கட்லட்

4 comments
தேவையான பொருட்கள்:-
  • அவல்              - 1கப்
  • உருளை கிழங்கு   - 2
  • காரட்                - 1
  • மல்லி இலை       - சிறிது
  • பிரட்                - 3
  • உப்பு                - சிறிது
  • மிளகாய் பொடி     - 1 ஸ்பூன்
  • பூண்டு              - 5 இதழ்
  • எண்ணெய்          - தேவையான அளவு
செய்முறை:-
  • உருளைகிழங்கை நன்கு வேக வைத்து கொள்ளவேண்டும்.காரட்டை துருவி கொள்ளவேண்டும்.
  • அவலை கழுவி வடித்து கொள்ளவேண்டும்.
  • பிரட் துண்டுகளை மிக்சியில் தூளாக்கி கொள்ளவேண்டும்.
  • ஒரு பாத்திரத்தில் கழுவிய அவல் வேக வைத்த கிழங்கை சேர்த்து உப்புடன் பிசைந்து அதனுடன் துருவிய காரட்,பொடியாக நறுக்கிய மல்லி இலை,பொடியாக நறுக்கிய பூண்டு இவைகளையும் சேர்த்து பிசைந்து கொள்ளவேண்டும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.
  • பிசைந்த மாவில் சிறிது எடுத்து உருண்டையாக்கி தட்டையாக தட்டி அதை பிரட் தூளில் பிரட்டி எடுத்து காய்ந்த எண்ணெயில் போட்டு முறுகலாக வந்த உடன் எண்ணெய்யை வடித்து தட்டில் போட வேண்டும்.
  • அவல் கட்லட் தயார்...
  • இதை சூடாக தக்காளி சாஸ் உடன்,மல்லி சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
Read More...

கிரீன் சிக்கன் வறுவல்

6 comments
தேவையான பொருட்கள்
  • எலும்பு இல்லாத சிக்கன்       - அரை கிலோ
  • புதினா இலைகள்               - இரண்டு கைப்பிடி
  • பூண்டு                          - 10 இதழ்கள்
  • இஞ்சி                           - சிறிது
  • பச்சை மிளகாய்                - 3
  • பட்டை                         - சிறிது
  • கார்ன் ப்ளார்                   - இரண்டு ஸ்பூன்
  • உப்பு                           - தேவையான அளவு
  • எண்ணெய்                     - 250 மில்லி
செய்முறை
  • சிக்கனை நன்கு கழுவி வடித்து ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவேண்டும்.
  • மிக்சியில் புதினாஇலைகள்,மிளகாய்,பட்டை,இஞ்சி,பூண்டு,இவைகளை போட்டு அரைத்து எடுக்க வேண்டும்.
  • அரைத்த விழுதை சிக்கன் மேல் போட்டு அதனுடன் கார்ன் ப்ளார்,உப்பை சேர்த்து பிசற வேண்டும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய்யை ஊற்றி காய்ந்தவுடன் சிக்கனை சிறிது சிறிதாக எண்ணெயில் போட்டு முறுகலாக வந்தவுடன் எடுத்து ஒரு தட்டில் போட வேண்டும்.
  • சிக்கன் வறுவலில் தேவைப்பட்டால் மிளகு பொடி,எலுமிச்சை 2 துளி சேர்த்து கொள்ளலாம்.
Read More...

வெள்ளரி ஊறுகாய்

10 comments
தேவையான பொருட்கள்:-
  • வெள்ளரிகாய்            - கால் கிலோ
  • எலுமிச்சம் பழம்         - பெரியது ஒன்று
  • மிளகாய் பொடி          - 2 ஸ்பூன்
  • உப்பு                     - 2ஸ்பூன்
செய்முறை:-
  • வெள்ளரி காய்களை நன்கு கழுவி ஈரம் போக துடைக்க வேண்டும்.
  • ஒரு பாத்திரத்தில் வெள்ளரியை நீள நீளமாக வெட்டி போட வேண்டும்.
  • வெட்டிய காயின் மேல் மிளகாய் பொடி உப்பை போட்டு அதன் மேல் எலுமிச்சையை பிழிந்து நன்றாக குலுக்கி விட வேண்டும்.
  • 5 நிமிடத்தில் நீர் விட ஆரம்பிக்கும்.அரை மணி நேரம் கழித்து நன்றாக பிரட்டி விட்டு ஈரமில்லாத பாட்டிலில் எடுத்து வைக்க வேண்டும்.
  • இது 2 வாரத்திற்கு நன்றாக இருக்கும். நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க வினிகர் சேர்த்து கொள்ளவேண்டும்.
Read More...

ஃப்ரூட் டெஸர்ட்

11 comments
தேவையான பொருட்கள்:-
  • பால் - 200 மில்லி
  • மாம்பழம் - 2
  • மாதுளம்பழம் - 1
  • நன்னாரி சிரப் - 2 ஸ்பூன்
  • டூட்டி ப்ருட்டி - சிறிது
  • சீனி - 1 ஸ்பூன்
  • கஸ்டர்ட் பவுடர் - 2 ஸ்பூன் 
செய்முறை:-
  • கஸ்டர்ட் பௌடரை 50 மில்லி பாலில் கட்டி இல்லாமல் கரைத்து கொள்ளவேண்டும்.
  • அடுப்பில் பாத்திரத்தை வைத்து மீதி பாலை ஊற்றி சீனி சேர்த்து காய்ச்ச வேண்டும்.
  • பால் கொதி வரும் போது கரைத்த கஸ்டர்ட் கலவையை ஊற்றி கிளறி கூழ் பதம் வரும் போது இறக்கி குளிர வைக்க வேண்டும்.
  • ஆறிய கலவையில் தோல் எடுத்து நறுக்கிய மாம்பழ துண்டுகள், உதிர்த்த மாதுளம் பழம் சேர்த்து கலந்து கண்ணாடி கிளாசில் போட்டு அதன் மேல் டூட்டி ப்ருட்டி போட்டு ப்ரிட்ஜில் வைத்து குளிர வைக்க வேண்டும்.
  • தேவைப்படும் பொழுது வெளியே எடுத்து நன்னாரி சிரப்பை சுற்றிலும் மேலே ஊற்றி பரிமாற வேண்டும்.
  • நமக்கு பிடித்த பழங்களை சேர்த்து செய்யலாம்.
Read More...

வடு மாங்காய்

14 comments

தேவையான பொருட்கள் :-
  • வடுமாங்காய்           - ஒரு படி 
  • மிளகாய் பொடி        - ஒரு கப் 
  • வெந்தயம்             - 50 கிராம் 
  • கடுகு                  - 50 கிராம்
  • தூள் உப்பு            - 100 கிராம் 
  • கட்டி பெருங்காயம்  - சிறு துண்டு
செய்முறை :-
  • வடுமாங்காய் காம்பை கிள்ளி எடுத்து விட்டு நன்றாக கழுவி துடைத்து கொள்ளவேண்டும்.
  • ஈரம் இல்லாத பிளாஸ்டிக் ஜாடியிலோ அல்லது கண்ணாடி ஜாடியிலோ மாங்காயை போடவேண்டும்.
  • தூள் உப்பை மாங்காயின் மேல் தூவி நன்றாக குலுக்கி விட வேண்டும்.
  • மறுநாள் ஜாடியை திறந்து பார்த்தால் நீர் விட்டிருக்கும்.
  • திரும்பவும் ஜாடியை குலுக்கி விட்டு  மூட வேண்டும்.
  • அடிக்கடி குலுக்கி விடுவதால் 3 நாட்களில் நிறைய நீர்விட்டு மாங்காய் நீரில் மூழ்கி நன்றாக சுருங்கி ஊறியிருக்கும்.
  • மறுநாள் வெந்தயம்,கடுகு,கட்டி பெருங்காயம்,இவற்றை தனித்தனியாக வறுத்து அனைத்தையும் மிக்சியில் போட்டு பொடியாக அரைத்து எடுக்க வேண்டும்.
  • மிளகாய் பொடியை ஊறிய மாங்காயின் மேல் போட்டு நன்றாக கலந்து விட்டு அதன்மேல் அரைத்த பொடியை சேர்த்து நன்றாக குலுக்கி விட்டு ஜாடியை மூட வேண்டும்.
  • மிளகாய்பொடியும்,அரைத்த பொடியும்,மேலும் ஊற ஊற மாங்காயில் சேர்ந்து உபயோகிக்க தயாராகிவிடும்.
Read More...

மின்ட்,பொடடோ ஃப்ரை

8 comments
தேவையான பொருட்கள்:-
  • உருளைகிழங்கு               - 4
  • புதினா இலைகள்             - ஒரு கைப்பிடி
  • பச்சை மிளகாய்              - 4
  • பூண்டு                       - 6 இதழ்கள்
  • கருவேப்பிலை,மல்லி இலை  -சிறிது
  • உப்பு                          - தேவையானது
  • எண்ணெய்                   - 2 ஸ்பூன்
செய்முறை:-
  • உருளை கிழங்கை நன்றாக கழுவிவிட்டு தோலுடனோ அல்லது தோலை எடுத்து விட்டோ வட்ட வட்டமாக அரிந்து கொள்ளவேண்டும்.
  • அரிந்த கிழங்கை சிறிது உப்பு கலந்த  தண்ணீரில் நன்றாக அலசி தண்ணீரை வடித்து எடுத்து கொள்ளவேண்டும்.
  • மிக்சியில் புதினா,கருவேப்பிலை,மல்லி,உப்பு,மிளகாய்,பூண்டு,
    ஆகியவற்றை போட்டு அரைத்து எடுத்து கொள்ளவேண்டும்.
  • அரிந்த கிழங்கில் அரைத்த கலவையை போட்டு நன்றாக கலந்து கொள்ளவேண்டும்.
  • ஒரு தட்டில் ஒருஸ்பூன் எண்ணெய்யை தடவி அதன் மேல் கிழங்கு கலவையை பரத்தி விட வேண்டும்.
  • மேலும் ஒரு ஸ்பூன் எண்ணெய்யை கலவையின் மேல் ஸ்பிரே செய்து
    அவனில் 15 நிமிடம் பேக் செய்து எடுக்க வேண்டும்.
  • மொறுமொறுப்பான எண்ணெய் குறைவான சிப்ஸ் தயார்.
Read More...