கொண்டை கடலை பலாகொட்டை குழம்பு

Leave a Comment
தேவையான பொருட்கள் :- 
  • கொண்டை கடலை       - கால் கிலோ 
  • பலா கொட்டை               - 15       
  • தக்காளி                             -  இரண்டு  
  • சின்ன வெங்காயம்      - 10               
  • மசால் பொடி                  - இரண்டு ஸ்பூன்  
  • மிளகாய் பொடி             - 1 ஸ்பூன்
  • புளி                                   -  நெல்லிக்காய் அளவு     
  • கருவேப்பிலை            -  1 ஆர்க்கு   
  • கடுகு, உளுந்து            - 1 ஸ்பூன் 
  • எண்ணெய்                   - தேவையான அளவு 
  • உப்பு                              - சிறிது 
  • பெருங்காயம்           - ஒரு சிட்டிகை

அரைக்க :-
  • தேங்காய்                      - சிறிது  
  • வேக வைத்த பலா கொட்டை    -  10 
  • பூண்டு                                                 - 10 பல் 
  • பெருஞ் சீரகம்                                  -  சிறிது 

செய்முறை :-
  • கொண்டை கடலையை 8 மணி நேரம் ஊற வைத்து வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
  • பலா கொட்டை யை தோல் உரித்து இரண்டு துண்டுகளாக வெட்டி கொள்ள வேண்டும் .
  • வெங்காயத்தை நீளமாக வெட்டியும் ,தக்காளியை துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவேண்டும்.
  • மிக்சியில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து வைத்து கொள்ளவேண்டும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, போட்டுவெடித்த உடன் கருவேப்பிலை போட்டு ,அடுத்து வெங்காயம் ,தக்காளி சேர்த்து வதக்கி எண்ணெய் பிரிந்த உடன் மிளகாய் ,மசால் பொடிகளை போட்டு கலர் மாறிய உடன் புளியை கரைத்து ஊற்றி இறுதியில் அரைத்த விழுதை ஊற்றி சிறிது தண்ணீர் சேர்த்து தேவையான உப்பை போட்டு நன்றாக கொதிக்க விடவேண்டும்.
  • குழம்பு சிறிது கெட்டி யானவுடன் இறக்கி பெருங்காயம் சேர்க்க வேண்டும்.
Read More...

வீட்டு மருத்துவம் - 2

1 comment
தேள் கடி :
                 வெற்றிலையுடன் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு மென்று விழுங்கி சிறிது தேங்காய் துண்டுகளை மென்று தின்றால் விஷம் உடனே இறங்கும்
தலைவலி :
                          இரண்டு வெற்றிலையை கசக்கி சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தை பொடித்து சேர்த்து குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலைவலி உடனே குணமாகும். 


Read More...

வீட்டு மருத்துவம் - 1

7 comments
                      நம் வீட்டிற்கு அருகில் முலிகை செடிகள் வளர்ந்திருந்தாலும் அதன் மருத்துவ பயன் தெரியாமல் நம்மில்  பலர் இருக்கின்றோம்.வீட்டில் நாம் பயன் படுத்தும் மளிகை பொருட்களிலும் மருத்துவ பயன் தெரியாமல் பலர் இருக்கின்றோம்.நான் பயன்பெற்று பயனடைந்த சில மருத்துவ குறிப்புக்களை இந்த பகுதியில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்

                                                                   குப்பைமேனி 


உடலில் படை, பத்து,அலர்ஜியினால் அரிப்பு இவை இருந்தால் குப்பைமேனிசெடியின் இலைகள் ஒரு கைபிடி அளவு எடுத்து கசக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால் ஓரிரண்டு நாட்களில் குணம் காணலாம். 

Read More...

கற்பனையில் உருவானவை

5 comments
எனது  மகன் பிரதீப் .இவருக்கு கிரியேட்டிவ் மைன்ட் அதிகம். மார்க்கட்டில் வாங்கிய பச்சை மிளகாயில் சில காய்கள் வட்டமாக சுருண்டு இரட்டை காய்களாக இருந்தன .அவற்றை பிரதீப்பிடம் கொடுத்தேன் .அதை நடனம் ஆடும் மிளகாய்  பெண்ணாக உருவாக்கியதைதான் நீங்கள் போட்டோவில் பார்க்கின்றீர்கள் .நன்றாக உள்ளதா...கற்பனையில் உருவானவைகளை பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் .கற்பனை தொடரும்...

Read More...

இஞ்சி சட்னி

Leave a Comment
தேவை யான பொருட்கள் :
  • இஞ்சி                          - 50 கிராம்   
  • மிளகாய் வத்தல்    - 5 
  • புளி                               - நெல்லி அளவு 
  • தேங்காய்                  - சிறிது 
  • பெருங்காயம்          - ஒரு சிட்டிகை
  • எண்ணெய்                - இரண்டு தேக்கரண்டி
  • கருவேப்பிலை       - ஒரு ஆர்க்கு 
செய்முறை :
  • இஞ்சியை நன்றாக  கழுவி தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.  
  • தேங்காயை பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும். 
  • அடுப்பில் வாணலியை  வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி இஞ்சி ,தேங்காயை அதில் போட்டு சிவப்பு நிறம் வரும் வரை வறுத்து பின்பு புளி, வத்தல், கருவேப்பிலை, பெருங்காயம்,போட்டு வதக்கி மிக்சியில்சிறிது உப்புடன் வதக்கிய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும்.
  • இதனுடன் சிறிது எண்ணையில் கடுகு,உளுந்து தாளித்து சேர்க்கவேண்டும்.






.



Read More...

இட்லி சாம்பார்

2 comments

தேவையான பொருட்கள் :
  • துவரம் பருப்பு           -  ஒரு கப்
  • மஞ்சள்பொடி           -  ஒரு சிட்டிகை
  • பெருங்காயம்           - ஒரு சிட்டிகை
  • சின்ன வெங்காயம்  -  பத்து
  • தக்காளி                     -  இரண்டு
  • மிளகாய் பொடி       - ஒரு  ஸ்பூன்
  • கருவேப்பிலை,மல்லி தழை   - சிறிது
  • எலுமிச்சை                  - அரை  முடி
  • கடுகு                           -ஒரு  ஸ்பூன்
  • எண்ணெய்                 - இரண்டு ஸ்பூன்    
செய்முறை :
  • துவரம் பருப்பை  நன்றாக  கழுவி குக்கரில் 2 கப் தண்ணீர்  விட்டு அதில் மஞ்சள்பொடி,பெருங்காயத்துடன் பருப்பை சேர்த்து 3 விசில் வரும் வரை வேகவிட  வேண்டும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்ற கடுகு,உளுந்தம் பருப்பு போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயம் ,தக்காளி  சேர்த்து  வதக்க வேண்டும்..
  • வதக்கிய பொருட்களுடன்  மிளகாய்பொடியை சேர்த்து சிறிது  வதக்கி ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன்  வேகவைத்த பருப்பை சேர்த்து நன்றாக கொதித்தவுடன்  தேவையான அளவு உப்பை சேர்த்து இறக்கி விடவேண்டும்,
  • இறக்கி வைத்த சாம்பாரில் அரை முடி எலுமிச்சை பிளிந்துவிடவேண்டும்,,


    Read More...

    பருத்திப்பால்

    4 comments
    தேவையான பொருட்கள்:
    • பருத்தி விதை         - 2 கைபிடி 
    • கருப்பட்டி             - 100 கிராம் 
    • தேங்காய் பால்        - அரை மூடி
    • சுக்கு                - அரைவிரளளவு
    • அரிசி மாவு           - 2 ஸ்பூன் 
    • ஏலக்காய்          - 2
    செய்முறை:
    •  பருத்தி விதையை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். காலையில் ஊறிய விதையை மிக்சியில் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து பால் எடுக்க வேண்டும்.  
    • கருப்பட்டியை தூளாக்கி ஒரு கப் தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி கொள்ளவேண்டும் .
    • ஓரு பாத்திரத்தில் பருத்திவிதை பாலை ஊற்றி காய்ச்ச வேண்டும் .ஒரு கொதி வந்த உடன் கருப்பட்டி பாலையும் தேங்காய்  பாலையும் ஊற்றி காய்ச்ச  வேண்டும்.
    • இந்த கலவை கொதிக்கும் போது அரிசி மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து அக் கலவையை கொதிக்கும் பருத்தி பாலில் சேர்த்து கரண்டியால் தொடர்ந்து இரண்டு நிமிடம் கிளறி பாத்திரத்தை இறக்கி விடவேண்டும்.
    • சுக்கை சிறிது வறுத்து பொடியாக்கி ,ஏலக்காயை பொடியாக்கி இறுதியில் சேர்க்க வேண்டும்.
    Read More...