கிரீன் சிக்கன் வறுவல்

6 comments
தேவையான பொருட்கள்
  • எலும்பு இல்லாத சிக்கன்       - அரை கிலோ
  • புதினா இலைகள்               - இரண்டு கைப்பிடி
  • பூண்டு                          - 10 இதழ்கள்
  • இஞ்சி                           - சிறிது
  • பச்சை மிளகாய்                - 3
  • பட்டை                         - சிறிது
  • கார்ன் ப்ளார்                   - இரண்டு ஸ்பூன்
  • உப்பு                           - தேவையான அளவு
  • எண்ணெய்                     - 250 மில்லி
செய்முறை
  • சிக்கனை நன்கு கழுவி வடித்து ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவேண்டும்.
  • மிக்சியில் புதினாஇலைகள்,மிளகாய்,பட்டை,இஞ்சி,பூண்டு,இவைகளை போட்டு அரைத்து எடுக்க வேண்டும்.
  • அரைத்த விழுதை சிக்கன் மேல் போட்டு அதனுடன் கார்ன் ப்ளார்,உப்பை சேர்த்து பிசற வேண்டும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய்யை ஊற்றி காய்ந்தவுடன் சிக்கனை சிறிது சிறிதாக எண்ணெயில் போட்டு முறுகலாக வந்தவுடன் எடுத்து ஒரு தட்டில் போட வேண்டும்.
  • சிக்கன் வறுவலில் தேவைப்பட்டால் மிளகு பொடி,எலுமிச்சை 2 துளி சேர்த்து கொள்ளலாம்.
Read More...

வெள்ளரி ஊறுகாய்

10 comments
தேவையான பொருட்கள்:-
  • வெள்ளரிகாய்            - கால் கிலோ
  • எலுமிச்சம் பழம்         - பெரியது ஒன்று
  • மிளகாய் பொடி          - 2 ஸ்பூன்
  • உப்பு                     - 2ஸ்பூன்
செய்முறை:-
  • வெள்ளரி காய்களை நன்கு கழுவி ஈரம் போக துடைக்க வேண்டும்.
  • ஒரு பாத்திரத்தில் வெள்ளரியை நீள நீளமாக வெட்டி போட வேண்டும்.
  • வெட்டிய காயின் மேல் மிளகாய் பொடி உப்பை போட்டு அதன் மேல் எலுமிச்சையை பிழிந்து நன்றாக குலுக்கி விட வேண்டும்.
  • 5 நிமிடத்தில் நீர் விட ஆரம்பிக்கும்.அரை மணி நேரம் கழித்து நன்றாக பிரட்டி விட்டு ஈரமில்லாத பாட்டிலில் எடுத்து வைக்க வேண்டும்.
  • இது 2 வாரத்திற்கு நன்றாக இருக்கும். நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க வினிகர் சேர்த்து கொள்ளவேண்டும்.
Read More...

ஃப்ரூட் டெஸர்ட்

11 comments
தேவையான பொருட்கள்:-
  • பால் - 200 மில்லி
  • மாம்பழம் - 2
  • மாதுளம்பழம் - 1
  • நன்னாரி சிரப் - 2 ஸ்பூன்
  • டூட்டி ப்ருட்டி - சிறிது
  • சீனி - 1 ஸ்பூன்
  • கஸ்டர்ட் பவுடர் - 2 ஸ்பூன் 
செய்முறை:-
  • கஸ்டர்ட் பௌடரை 50 மில்லி பாலில் கட்டி இல்லாமல் கரைத்து கொள்ளவேண்டும்.
  • அடுப்பில் பாத்திரத்தை வைத்து மீதி பாலை ஊற்றி சீனி சேர்த்து காய்ச்ச வேண்டும்.
  • பால் கொதி வரும் போது கரைத்த கஸ்டர்ட் கலவையை ஊற்றி கிளறி கூழ் பதம் வரும் போது இறக்கி குளிர வைக்க வேண்டும்.
  • ஆறிய கலவையில் தோல் எடுத்து நறுக்கிய மாம்பழ துண்டுகள், உதிர்த்த மாதுளம் பழம் சேர்த்து கலந்து கண்ணாடி கிளாசில் போட்டு அதன் மேல் டூட்டி ப்ருட்டி போட்டு ப்ரிட்ஜில் வைத்து குளிர வைக்க வேண்டும்.
  • தேவைப்படும் பொழுது வெளியே எடுத்து நன்னாரி சிரப்பை சுற்றிலும் மேலே ஊற்றி பரிமாற வேண்டும்.
  • நமக்கு பிடித்த பழங்களை சேர்த்து செய்யலாம்.
Read More...

வடு மாங்காய்

14 comments

தேவையான பொருட்கள் :-
  • வடுமாங்காய்           - ஒரு படி 
  • மிளகாய் பொடி        - ஒரு கப் 
  • வெந்தயம்             - 50 கிராம் 
  • கடுகு                  - 50 கிராம்
  • தூள் உப்பு            - 100 கிராம் 
  • கட்டி பெருங்காயம்  - சிறு துண்டு
செய்முறை :-
  • வடுமாங்காய் காம்பை கிள்ளி எடுத்து விட்டு நன்றாக கழுவி துடைத்து கொள்ளவேண்டும்.
  • ஈரம் இல்லாத பிளாஸ்டிக் ஜாடியிலோ அல்லது கண்ணாடி ஜாடியிலோ மாங்காயை போடவேண்டும்.
  • தூள் உப்பை மாங்காயின் மேல் தூவி நன்றாக குலுக்கி விட வேண்டும்.
  • மறுநாள் ஜாடியை திறந்து பார்த்தால் நீர் விட்டிருக்கும்.
  • திரும்பவும் ஜாடியை குலுக்கி விட்டு  மூட வேண்டும்.
  • அடிக்கடி குலுக்கி விடுவதால் 3 நாட்களில் நிறைய நீர்விட்டு மாங்காய் நீரில் மூழ்கி நன்றாக சுருங்கி ஊறியிருக்கும்.
  • மறுநாள் வெந்தயம்,கடுகு,கட்டி பெருங்காயம்,இவற்றை தனித்தனியாக வறுத்து அனைத்தையும் மிக்சியில் போட்டு பொடியாக அரைத்து எடுக்க வேண்டும்.
  • மிளகாய் பொடியை ஊறிய மாங்காயின் மேல் போட்டு நன்றாக கலந்து விட்டு அதன்மேல் அரைத்த பொடியை சேர்த்து நன்றாக குலுக்கி விட்டு ஜாடியை மூட வேண்டும்.
  • மிளகாய்பொடியும்,அரைத்த பொடியும்,மேலும் ஊற ஊற மாங்காயில் சேர்ந்து உபயோகிக்க தயாராகிவிடும்.
Read More...

மின்ட்,பொடடோ ஃப்ரை

8 comments
தேவையான பொருட்கள்:-
  • உருளைகிழங்கு               - 4
  • புதினா இலைகள்             - ஒரு கைப்பிடி
  • பச்சை மிளகாய்              - 4
  • பூண்டு                       - 6 இதழ்கள்
  • கருவேப்பிலை,மல்லி இலை  -சிறிது
  • உப்பு                          - தேவையானது
  • எண்ணெய்                   - 2 ஸ்பூன்
செய்முறை:-
  • உருளை கிழங்கை நன்றாக கழுவிவிட்டு தோலுடனோ அல்லது தோலை எடுத்து விட்டோ வட்ட வட்டமாக அரிந்து கொள்ளவேண்டும்.
  • அரிந்த கிழங்கை சிறிது உப்பு கலந்த  தண்ணீரில் நன்றாக அலசி தண்ணீரை வடித்து எடுத்து கொள்ளவேண்டும்.
  • மிக்சியில் புதினா,கருவேப்பிலை,மல்லி,உப்பு,மிளகாய்,பூண்டு,
    ஆகியவற்றை போட்டு அரைத்து எடுத்து கொள்ளவேண்டும்.
  • அரிந்த கிழங்கில் அரைத்த கலவையை போட்டு நன்றாக கலந்து கொள்ளவேண்டும்.
  • ஒரு தட்டில் ஒருஸ்பூன் எண்ணெய்யை தடவி அதன் மேல் கிழங்கு கலவையை பரத்தி விட வேண்டும்.
  • மேலும் ஒரு ஸ்பூன் எண்ணெய்யை கலவையின் மேல் ஸ்பிரே செய்து
    அவனில் 15 நிமிடம் பேக் செய்து எடுக்க வேண்டும்.
  • மொறுமொறுப்பான எண்ணெய் குறைவான சிப்ஸ் தயார்.
Read More...

தர்பூசணி ஜூஸ்

12 comments
கோடையில அதிகமா விளையிற கொடிதாவரம் தர்பூசணி.அது இப்ப எங்க ஊர்ல அதிகமா மார்கெட்ல மலைமலையா குவிஞ்சு விற்பனைக்கு வந்திருக்கு.இந்த பழம் நம்ம ஆரோக்கியத்துக்கு ரொம்ப ரொம்ப நல்லதுங்க.இதுல நீர்சத்து நிறைய இருக்கிறதுனாலே உடலுக்கு குளிர்ச்சியை தரும்.விட்டமின் நிறைந்ததும் கூட.மலச்சிக்கலை தீர்க்கும்.பசியை தூண்டும்.சீசனில் கிடைக்கும் பழங்களை நாம் பயன் படுத்திக்க வேண்டும்.மருத்துவ ரீதியா இந்தப்பழ ஜூஸ் உடன் மிளகு பொடி,சீரகபொடி சேர்த்து சாப்பிடலாம்.சுவைக்காக சாப்பிட ஜூஸ் உடன் தேன்,அல்லது சர்க்கரை உடன் எலுமிச்சை சாறு சேர்த்து சாப்பிடலாம்.

தேவையானவை:-
  • தர்பூசணி துண்டு                  - ஒன்று 
  •  சர்க்கரை                                  - சிறிது 
  •  எலுமிச்சை  சாறு                 - அரை ஸ்பூன் 
  •  ஐஸ் க்யூப்                                - நான்கு 

செய்முறை:-
  • தர்பூசணியை தோல் சீவி சதை பகுதியை மட்டும் தனியாக எடுக்க வேண்டும்.
  •  சதை பகுதியை சிறு துண்டுகளாக வெட்டி முறுக்கு பிழியும் அச்சில் போட்டு பிழிந்தால் சாறு தனியாக விதை தனியாக வந்துவிடும்.
  • பிழிந்த சாற்றில் எலுமிச்சை சாறு சேர்த்து அதனுடன் சர்க்கரை சேர்த்து கரைய விட்டு ஐஸ் கியூப் உடன் கிளாசில் ஊற்றி பரிமாற வேண்டும்.
Read More...

ஜில்ஜில் ஜிகர்தண்டா

12 comments
நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜிகர்தண்டா பதிவோட உங்க அனைவருக்கும் வணக்கம்.சந்தர்ப்ப சூழ்நிலையோட கேமிரா ரிப்பேரும் சேர்ந்து பதிவே போட முடியல்லை.இப்ப அடிக்கிற வெயிலுக்கு மக்கள்ஸ் எல்லாருக்கும் ஆரோக்கியத்துல பல பிரச்சினைகள் வரும்.வாய் புண், வயிற்றுப்புண்,சிறுநீர் இறங்குவதில் பிரச்சினை,அதிகமாக தலைமுடி உதிர்தல்,இப்பிடி பல பிரச்சினைகள் வரும்.இதற்கெல்லாம் தீர்வு உணவே மருந்துதான்..இந்த வெயிலுக்கு தண்ணி பழம்,நுங்கு,இளநீர்,மோர்,சாப்பிடலாம்.இதோட வீட்டில நாமளே ஜிகர்தண்டா செய்து சாப்பிடலாம்.இதுல சேர்க்கிற ரோஸ் சிரப், நன்னாரி,பாதாம் பிசினால உடற்சூடு குறையும்.
தேவையான பொருட்கள் (நான்கு நபர்களுக்கு ):-
  • பாதாம் பிசின்                      - இரண்டு கட்டிகள்
  • ரோஸ் சிரப்                          -  எட்டு துளிகள்
  •  பால்                                        - 400 மில்லி
  •  நன்னாரி சிரப்                     - 4 குழி கரண்டி
  •  ஐஸ் க்யூப்                            -6 

செய்முறை:-
  • பாதாம் பிசினை  நன்றாக கழுவி விட்டு எட்டு மணி நேரம் ஊறவிட வேண்டும். 
  • ஊறிய பின் பாதாம் பிசின் நன்றாக பூத்து அளவில் அதிகமாக இருக்கும்.
  • ஒரு கிளாஸில் ஊறிய பாதாம் பிசின் சிறிது போட்டு இரண்டு துளிகள் ரோஸ் சிரப்,ஒரு குழி கரண்டி நன்னாரி சிரப்,நூறு மில்லி பால் சேர்த்து ஸ்பூனால் நன்றாக கலக்கி விட்டு இறுதியில் ஐஸ் கியூப்பை சேர்க்க வேண்டும்.
  • தேவை பட்டால் ஐஸ் கிரீம்  சேர்த்து கொள்ளலாம்.

Read More...