கதை கேளு... கதை கேளு...

10 comments
ஒரு ஞானி தன் சீடருடன் ஒரு ஊருக்கு உபதேசம் செய்ய போயிருந்தார். அவ ஊர் மக்கள் ஞானியை வரவேற்று நன்றாக உபசரித்தார்கள் . அவ் ஊரை விட்டு  வேறு ஊருக்கு செல்லும் போது ஞானி இவ் ஊர் மக்கள் அனைவரும் பிரிந்து செல்ல வேண்டும் என்று இறைவனிடம் வேண்டினார்.மறுநாள் வேறு ஊருக்கு சீடருடன் சென்றார். அங்கு மக்கள் அவரை மதிக்கவில்லை. அவரின் உபதேசத்தை கேட்கவில்லை. அவ் ஊரை விட்டு சென்ற ஞானி இறைவனிடம் இவ் ஊர் மக்கள் அனைவரும் பிரியாமல் இருக்க வேண்டும் என்று வேண்டினார்.  சீடர் ஒன்றும் புரியாமல் நம்மை மதித்து மரியாதை செய்த மக்களை பிரிய சொல்கிறீர்கள், நாகரீகம் தெரியாத இம் மக்களை அவர்கள்  பிரியாமல் இவ் ஊரிலேயே இருக்க வேண்டும் என்று தாங்கள் கூறும் காரணம்  எனக்கு விளங்க வில்லை என்று சீடர் கேட்டார். அதற்கு ஞானி நல்ல மனிதர்கள் நான்கு திசைகளில் பிரிந்து போனால் அவர்களிடம் பழகும்  தீய மனிதர்கள் நல்லவர்களாக மாறுவதற்கு வழி கிடைக்கும், ஆனால் ஒரே ஊரில் உள்ள தீய மனிதர்கள்  பிரிந்து போகாமல்  ஒரே இடத்தில் இருந்தால் அவர்களிடம் உள்ள தீய குணங்கள் மற்றவர்களிடம் பரவாமல் இருக்கும் . அதனால்தான் இவ்வாறு கூறினேன என்றார்.
                                                             இந்த கதையை படித்து விட்டு என் மகன் சின்னவர் என்னிடம் கேட்ட கேள்வி அம்மா...பூவோட சேர்ந்த நாறும் மணம் பெறும்.. பன்றியோட சேர்ந்த கன்றும் மலம் தின்னும்.. அதெப்பிடி இந்த கதையால இந்த பழமொழியோட லாஜிக் எங்கியோ உதைக்குதே..? ஏன் அந்த ஊரில் இருந்து பிரிந்து செல்லும் நல்லவர்கள்  கெட்டவர்களுடன் சேர்ந்து  கெட்டவர்களாக மாறிட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்..? என்ற கேள்வியை என் முன் வைத்தார். எனக்கு பதில் தெரியல்லை... படிக்கிற நீங்க என்ன சொல்றீங்க...?
Read More...

வரைவு கோலம்

21 comments
பொங்கலன்று போட்ட வரைவு கோலம்.எல்லார் வீட்டு வாசல்லயும் பொங்கலுக்கு பொங்கல் பானை ,கரும்பு போடுவார்கள். அன்று தெருவில்  வரைவு கோல போட்டின்னு சொன்னதுனால நான் இந்த நடன பெண்   போட்டேன்.. 9மணிக்கு ஜட்ஜ்ஜஸ் வர்றதுக்குள்ள கோலம் மழை பெய்து அழிஞ்சு போச்..


Read More...

அடையும் கார சட்னியும்

12 comments
மலையும் மலை சார்ந்த நிலமும் - குறிஞ்சி
காடும் காடு சார்ந்த நிலமும் - முல்லை
வயலும் வயல் சார்ந்த நிலமும் - மருதம்
கடலும் கடல் சார்ந்த நிலமும் - நெய்தல்
மணலும் மணல் சார்ந்த நிலமும் - பாலை
என்ன.. அடையும் கார சட்னியும்னு தலைப்பை போட்டு தமிழ் பாடம் நடத்துறாங்க அப்பிடின்னு நினைக்காதீங்க... ஏன்னா.. இப்ப ஆறாவதா ஒரு நிலம் உருவாயிருக்கு. அது
இருளும் இருள் சார்ந்த நிலம் - தமிழ்நாடு
அட ஆமாங்க நம் தமிழ்நாட்டின் நிலை அப்பிடி ஆகிபோச்சு.. இந்த கரண்ட்டை நம்பி எந்த வேலையும் செய்ய முடியல்லை.. பாருங்க அடைதோசைக்காக பருப்பு ஊற வைத்தேன். கடந்த சில மாசமா காலையில் 6 மணிக்கு போற கரண்ட் 10 மணிக்குதான் வரும். அதனால பசங்கள ஸ்கூல்,கல்லூரிக்கு ரெடியாக்கும் அம்மாக்கள் எல்லாம் 5 மணிக்கே எழுந்து ஆட்டுற, அரைக்கிற வேலையை முதல்ல செய்துடுவாங்க.. நான் அடைதோசைக்கு ஊற வைத்த அன்று 5.30க்கே கரண்ட் போயிடுத்து.. இனி 10மணிக்குதான் வரும், ஆட்டுக்கல்லுல போட்டு ஆட்டி எடுத்திரலாம்னு மூலையில கிடந்த கல்லை நல்லா கழுவி அதுல ஆட்டி எடுத்து திரும்பவும் கழுவி மறுபடியும் காரசட்னிக்கு அரைத்து அடுத்து அம்மியில லன்ச் ப்ரிபரேசனுக்கு தேவையானதை அரைத்து உஸ் அப்பாடான்னு... ஆகிபோச்சு போங்க..:( ஆனா ஒரு சந்தோஷம் மிக்சி, கிரைண்டர்ல அரைத்து சாப்பிடுர டேஸ்ட்டை விட அம்மி, ஆட்டுக்கல்லுல அரைச்சி சாப்பிட்டா அந்த டேஸ்டே தனிதான். என்ன பண்ணறது.... இல்லாத ஊருக்கு இலுப்பைபூ சர்க்கரைன்னு சொல்றா மாதிரி நாமளும் மாறிட வேண்டியதுதான்..:) சரி அடைதோசை சாப்பிடலாம் வாங்க.

அடைதோசை:-

தேவையான பொருட்கள்
  • பச்சரிசி - ரெண்டு கைப்பிடி
  • துவரம் பருப்பு - ரெண்டு கைப்பிடி
  • பாசிப்பருப்பு - ரெண்டு கைபிடி
  • உளுந்து - ஒரு கைப்பிடி
  • உப்பு - அரை ஸ்பூன்
  • மிளகாய் பொடி - ஒரு ஸ்பூன்
செய்முறை:-
  • அரிசி பருப்புகளை 15 நிமிடம் ஊறவைத்து ஆட்டுக்கல்லில் போட்டு உப்புடன் அரைத்து எடுத்து மிளகாய் பொடியை சேர்த்து நன்கு கலந்து தேவையானால் சிறிது நீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கலந்து வைக்க வேண்டும்.
  • தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானவுடன் மாவை ஊற்றி வட்டமாக இழுத்து எண்ணெய்யோ, நெய்யோ இரண்டு ஸ்பூன் ஊற்றி நன்றாக வெந்த உடன் திருப்பி போட்டு 2நிமிடத்தில் எடுக்க வேண்டும்.
  • அடை தோசை தயார்.

கார சட்னி:-

தேவையான பொருட்கள்
  • தேங்காய் - கால் மூடி
  • மிளகாய் வற்றல் - 5
  • பூண்டு - 2பல்
  • கருவேப்பிலை - ஒரு ஆர்க்கு
  • பொரிகடலை - ஒரு கைப்பிடி
  • உப்பு - சிறிது
செய்முறை:-
  • பொரிகடலை தவிர மற்ற பொருட்களை எண்ணெயில் நன்றாக வதக்கி எடுத்து உப்புடன் ஆட்டுக்கல்லில் போட்டு அரைத்து சிறிது அரைபட்ட உடன் பொரிகடலையை போட்டு வழு வழுப்பாக இல்லாமல் கொர கொரவென்று அரைத்து எடுத்து தேவையானால் சிறிது நீர் ஊற்றி கலந்து ஒரு பாத்திரத்தில் எடுத்து இறுதியில் கடுகு, உளுந்து தாளித்து கொட்ட வேண்டும்.
  • கார சட்னி ரெடி.
Read More...

தக்காளி தேங்காய் பால் குழம்பு

16 comments
தேவையான பொருட்கள்:-
  • தக்காளி - கால் கிலோ
  • பல்லாரி வெங்காயம் - 1
  • பச்சை மிளகாய் - 5
  • தேங்காய் பால் - 1 கப்
  • கருவேப்பிலை - சிறிது
  • மிளகாய் பொடி - கால் ஸ்பூன்
  • சீரக பொடி - கால் ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - 2 ஸ்பூன்
  • கடுகு , உளுந்து - 1 ஸ்பூன்
  • மல்லி செடி - சிறிது
செய்முறை:-
  • தக்காளியை கட் பண்ணி வெங்காயத்தை பொடியாக நறுக்கி, பச்சை மிளகாயை நீளமாக நறுக்கி வைக்க வேண்டும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்த உடன் கடுகு,உளுந்து போட்டு வெடித்த உடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை போட்டு வதக்க வேண்டும்.
  • வெங்காயம் வதங்கிய உடன் நறுக்கி வைத்த தக்காளியை போட்டு வதக்க வேண்டும்.
  • தக்காளி வதங்கிய உடன் மிளகாய் பொடி, சீரக பொடி, உப்பு போட்டு நன்றாக பிரட்டி விட வேண்டும்.
  • மிளகாய்பொடி சீரக பொடி வதங்கி கலர் மாறிய உடன் அரைத்தெடுத்த தேங்காய் பாலை ஊற்றி அதனுடன் சிறிது தண்ணீர் கலந்து கலக்கி விட்டு குழம்பு கொதித்த உடன் இறக்கி வைக்க வேண்டும்.
  • தக்காளி தேங்காய் பால் குழம்பு தயார்.
Read More...

மார்கழி பூக்கள்

12 comments






Read More...

மயக்கும் மார்கழி

8 comments

மார்கழி மாதத்தை கடவுளை வழிபடும் மாதமாக அனைவரும் அதிகாலையில்  எழுந்து குளித்து கோவிலுக்கு செல்கின்றனர்.
முன்பனிக்காலம் மார்கழி தொடங்கி விட்டது. இதை உத்தராயண காலம் என்று சொல்வார்கள். சூரியன் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி பயணிக்கும் காலம். தேவர்களின் விடிகாலை பொழுது. ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயன காலம், தேவர்களின் இரவு பொழுது..தை முதல் ஆனி வரை பகல் பொழுது. அந்த வகையில் மார்கழி மாதம் தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்த வேளையாக கருத படுகிறது. எனவே இந்த மாதம் அனைவரும் காலை 4 மணிக்கு எழுந்து குளித்து வாசலில் கோலம் போட்டு வீட்டில் விளக்கேற்றி பின் அருகில் இருக்கும் கோவிலுக்கும் சென்று வருவர். அதனால் இந்த மாதம் சுறுசுறுப்பான மாதமாக காலை வேளையில் இருக்கும். பஜனை கோஷ்டியும், கோவில்களில் முழங்கும் பக்தி பாடல்களும் அனைவருக்கும் பக்தியையும் சுறுசுறுப்பையும் கொடுக்கும். அறிவியல் ரீதியாக  பார்க்கும் பொழுது அதிகாலை பொழுது கோவிலுக்கு செல்வோருக்கு அந்த வேளையில் ஓசோன் படலம் அதிகமாக இருப்பதால் ஆக்சிஜன் அதிகமாக கிடைத்து ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும் ஒரு காரணமாக உத்தராயண காலத்தை சொல்லலாம்.



                                       இந்த சீசன்ல மணம் தரும் மலர்கள் கிடைப்பது மிக அரிது..அதனால அதிகாலை சுவாமி தரிசனத்திற்கு படத்தில் இருக்கும் இந்த மலர்களைதான் பூஜைக்கு கொடுக்க போகிறேன்..தோட்டத்தில் அதிகமாக இந்த மலர்கள் பூத்திருப்பதும் வண்ணத்துப்பூச்சிகள் அதிகமாக பறந்ததும் போட்டோ எடுத்தாச்சு..:) கேந்தி பூ என்று இங்க சொல்லுவாங்க..இந்த பூவிற்கு நீங்க என்ன பேர் சொல்வீங்க.
பூ பூவா பறந்து போகும் வண்ணத்து பூச்சியக்கா..நீ பளபளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா..
என்ன.. துருதுருன்னு பாக்குற..
தப்பிக்க எங்க வழி இருக்குனு பாக்குறேன்..நீ என்னடான்னா அக்கா..சொக்கா..னு பாடுறே. எனக்கு பயத்துல கக்கா..வருது.
Read More...

தேன்மிட்டாய்

28 comments
இட்லிக்கு அரிசி, உளுந்து ஊற வைக்கும் போது புது உளுந்தம் பருப்பு என்று தெரிந்து ஒரு கைப்பிடி குறைவாக எடுத்து ஊற வைத்தேன். ஆனாலும் மாவு கிரைண்டரில் சுத்தும் போது மாவின் அளவு பொங்கி கிரைண்டர் விளிம்பில் வழியும் அளவு பொங்கி வந்தது. உளுந்து அளவு அதிகமாக இருந்தால் இட்லி நன்றாக வராது என்ற காரணத்தால் சிறிது மாவை தனியாக எடுத்து விட்டு இட்லிக்கு மாவு கலந்தேன்.அந்த சிறிது மாவில் என்ன செய்யலாம் என்று யோசித்த போது தோன்றிய ஐடியாதான் இந்த தேன்மிட்டாய்.
செய்து பார்த்தேன்... மிக நன்றாக வந்தது.
தேவையான பொருட்கள்:-
  • உளுந்து மாவு (கிரைண்டரில் அரைத்தது)                 - 2 கைபிடி
  • மைதா மாவு                   - 2 ஸ்பூன்
  • அரிசி மாவு                     - 2 ஸ்பூன்
  • ஜீனி                                 - 100 கிராம்
  • எண்ணெய்                    - தேவையான அளவு
செய்முறை:-
  • உளுந்து,மைதா,அரிசி மாவுகளை ஒன்றாக கலந்து தண்ணீர் ஊற்றாமல் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
  • ஒரு பாத்திரத்தில் ஜீனியை கொட்டி அது முழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கம்பி பதத்திற்கு பாகு வைக்க வேண்டும்.
  • வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடான உடன் மாவு கலவையை சிறிது சிறிதாக ஊற்றி அது நன்றாக பொரிந்து வந்த உடன் எண்ணெய்யை வடித்து விட்டு ஜீனிப்பாகில் போட்டு இரண்டு நிமிடம் கழித்து தனியாக எடுத்து தட்டில் வைக்க வேண்டும்.
  • தேன் மிட்டாய் தயார்.
  • சீனிப்பாகு சூடாக இருக்கும் போதே எண்ணெய்யில் வடித்த உருண்டையை போட வேண்டும்.இவ்வாறு செய்தால் உருண்டை பாகை நன்றாக உள்வாங்கும்.
Read More...