Showing posts with label பொழுதுபோக்கு. Show all posts
Showing posts with label பொழுதுபோக்கு. Show all posts

வீட்டு தோட்டம்

8 comments
நம்ம வீட்டு தோட்டத்தில ( தொட்டியில) விதை போட்டு அதுல கிடைக்கிற பயன்பாட்டை அனுபவிக்கிறதே தனி சந்தோஷந்தான்.. மகியோட தொட்டி தோட்டத்தை பார்த்து ஒரு ஈடுபாட்டோட வீட்டில் ஆரம்பித்த தொட்டி தோட்டம் சமீபத்தில் நாங்கள் ஆரம்பித்த வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷனில் தோட்டம் போட ஐடியா வந்தது. பஸ், லாரி கழுவிய தண்ணீர் வீணாகாமல் அது போகும் பாதையில் தோட்டம் அமைத்தேன். ஆயில் சேர்ந்த தண்ணீரால் விளைச்சல் கம்மியாகி போனது.  வீட்டிற்கு தேவையான காய் வந்தது. பூசணி காய் அங்கு வேலை செய்பவர்களும் பயன் பெறும் வகையில்  நன்றாக காய்த்தது. இப்பொழுது ஆயில் பில்டராகி தண்ணீர் சுத்தமாக வரும்வகையில் வேலை செய்தாகி விட்டது. இனி வாழை , தென்னை வைக்க வேண்டும். இப்போல்லாம் புதினா தேவையானது வீட்டிலேயே கிடைக்கிறது. கடையில் வாங்குவது இல்லை.

தட்டை பயிர்

பாகற்காய்

பூசணி

தர்பூசணி, வெண்டைகாய்

புதினா

வெற்றிலை, ஓமவல்லி, மஞ்சள்

Read More...

கதை கேளு... கதை கேளு...

10 comments
ஒரு ஞானி தன் சீடருடன் ஒரு ஊருக்கு உபதேசம் செய்ய போயிருந்தார். அவ ஊர் மக்கள் ஞானியை வரவேற்று நன்றாக உபசரித்தார்கள் . அவ் ஊரை விட்டு  வேறு ஊருக்கு செல்லும் போது ஞானி இவ் ஊர் மக்கள் அனைவரும் பிரிந்து செல்ல வேண்டும் என்று இறைவனிடம் வேண்டினார்.மறுநாள் வேறு ஊருக்கு சீடருடன் சென்றார். அங்கு மக்கள் அவரை மதிக்கவில்லை. அவரின் உபதேசத்தை கேட்கவில்லை. அவ் ஊரை விட்டு சென்ற ஞானி இறைவனிடம் இவ் ஊர் மக்கள் அனைவரும் பிரியாமல் இருக்க வேண்டும் என்று வேண்டினார்.  சீடர் ஒன்றும் புரியாமல் நம்மை மதித்து மரியாதை செய்த மக்களை பிரிய சொல்கிறீர்கள், நாகரீகம் தெரியாத இம் மக்களை அவர்கள்  பிரியாமல் இவ் ஊரிலேயே இருக்க வேண்டும் என்று தாங்கள் கூறும் காரணம்  எனக்கு விளங்க வில்லை என்று சீடர் கேட்டார். அதற்கு ஞானி நல்ல மனிதர்கள் நான்கு திசைகளில் பிரிந்து போனால் அவர்களிடம் பழகும்  தீய மனிதர்கள் நல்லவர்களாக மாறுவதற்கு வழி கிடைக்கும், ஆனால் ஒரே ஊரில் உள்ள தீய மனிதர்கள்  பிரிந்து போகாமல்  ஒரே இடத்தில் இருந்தால் அவர்களிடம் உள்ள தீய குணங்கள் மற்றவர்களிடம் பரவாமல் இருக்கும் . அதனால்தான் இவ்வாறு கூறினேன என்றார்.
                                                             இந்த கதையை படித்து விட்டு என் மகன் சின்னவர் என்னிடம் கேட்ட கேள்வி அம்மா...பூவோட சேர்ந்த நாறும் மணம் பெறும்.. பன்றியோட சேர்ந்த கன்றும் மலம் தின்னும்.. அதெப்பிடி இந்த கதையால இந்த பழமொழியோட லாஜிக் எங்கியோ உதைக்குதே..? ஏன் அந்த ஊரில் இருந்து பிரிந்து செல்லும் நல்லவர்கள்  கெட்டவர்களுடன் சேர்ந்து  கெட்டவர்களாக மாறிட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்..? என்ற கேள்வியை என் முன் வைத்தார். எனக்கு பதில் தெரியல்லை... படிக்கிற நீங்க என்ன சொல்றீங்க...?
Read More...

கரிசல் தோட்ட கருங்குருவி

20 comments
ஷாப்பிங் போறது,டூர் போறது,இதெல்லாம் ஒரு மனுஷனோட செக்கு மாட்டு வாழ்க்கைக்கு ஒரு சந்தோஷத்தை கொடுக்கிறதுதான்..ஆனா அதை விட சந்தோஷம் ஒரு தோட்டத்தில அறுவடை செய்யும் நேரம் சுற்றிலும் பறக்கும், ஊர்ந்து செல்லும் ஜீவராசிகளை பார்ப்பது நல்ல பொழுதுபோக்கு..! வாங்க... சோளம் விதைச்ச தோட்டத்துக்கு போவோம்.சோளதட்டையை பார்த்தாலே சிறு வயதில் கேட்ட கதைதான் நினைவுக்கு வரும்.
செல்லமா வளர்த்த ஒரு பெண் கல்யாணம் பண்ணி புகுந்த வீட்டுக்கு போனாளாம்.புகுந்த வீட்டில் மாமியார் பின்புற தோட்டத்தில் மாமரத்தில் மாங்காய் பறிக்க சொல்ல மருமகள் "எனக்கென்ன தெரியும் செல்ல பிள்ளைக்கு "என்று சொல்லி வேலை செய்யாமல் இருக்க, மறுநாள் விடியும் பொழுது துளசி மாடத்திற்கு விளக்கு வைக்க மாமியார் சொல்ல, மருமகள் "எனக்கென்ன தெரியும் செல்ல பிள்ளைக்கு "என்று சொல்லி இருக்கிறாள். மாமியாருக்கு "அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பியும் உதவ மாட்டான்" பழ மொழி நினைவுக்கு வர பாடத்தை ஆரம்பிச்சிட்டாங்க...மருமகளிடம் வீட்டு மூலையில் சார்த்தி இருக்கும்சோளதட்டை யில் ஒன்று எடுத்து வர சொல்ல, அவள் "எனக்கென்ன தெரியும் செல்ல பிள்ளைக்கு " என்று கூற மாமியார் எழுந்து போய் சோளத்தட்டையை உருவி சுத்தி சுத்தி அடிக்க மருமகள் அலறி கொண்டே ஐயோ! அது மாமரம்,இது மன்னவன் கோயில்,சுத்தி அடிக்கிறது சோளதட்டைன்னு சொல்லி அன்றில் இருந்து சொன்ன வேலையை தட்டாமல் செய்தாளாம்.
தோட்டம் வந்தாச்சு...crop cutter ல சோளத்தை கட் பண்ணி போடுறதை பாத்துட்டு அப்பிடியே ஒரு சுத்து வருவோம்.




எல்லாரும் போயிடுங்க....crop cutter வருது..ஜாக்கிரதை..!
இந்த கட்டிங் மெஷின் சோளத்தோட சோளமா நம்மையும் சேர்த்து சுருட்டி போட்டிருக்கும். யப்பா.. ஜஸ்ட் மிஸ்ஸிங்.. நினைத்தாலே ஈரக்குலை நடுங்குது..!
உங்க சோளத்தை திங்கலையே ... தேனைதானே குடிச்சேன்..
ரெக்கைய வெட்டிடீங்களே.. பாவிகளா..!
இந்த முருங்கக்காயை காய விட்டுட்டு போறா மாதிரி இந்த சோளத்தையும் காய விட்டுட்டு போலாமில்ல..நாங்க பிழைச்சிக்குவோம்..
இது என்ன கொடுமை! ஒடி ஒடி போட்டோ எடுக்கிறாங்க.. ச்சீ! வெட்கமா இருக்கு.. இலைக்கு பின்னாலே ஒளிஞ்சுடுவோம்...
அந்த கருத்த மாமா வந்திட்டார் ...எல்லாரும் ஒடுங்க ....! கருத்த கோழி மிளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன்....பாட்டு வேற பாடி பயம் காட்டறார்..இன்னிக்கு யாரு டிக்கெட் வாங்க போறோமோ......ஆண்டவா..!காப்பாத்தப்பா...!!
ஆண்டவன் " ஒரு கதவை மூடினா இன்னொரு கதவை திறப்பான்" தெரியுமில்லே..நீங்க சோளத்தை எடுத்துட்டு போனா....அட போய்யா.. நாட்டு சோளம் இருக்கில்ல எங்களுக்கு..

Read More...