வெண்டைகாய் ஃப்ரை

17 comments
வெண்டைகாய் ஃப்ரை செய்றது கொஞ்சம் லொள்ளு பிடிச்ச வேலைதான் ஆனா செய்தா வெண்டைகாய் விலுவிழுப்பு  பிடிக்காம அதைசாப்பிடாதவங்களும் குறிப்பா குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.காயில் இருக்கும் விதைகளை முழுவதும் எடுத்துவிட்டு செய்வதால் விலுவிலுப்பு இல்லாமல் வேலையும் மிக வேகமாக எளிதாக முடிந்துவிடும்.
தேவையான பொருட்கள்:-
  • வெண்டைகாய்                                   - 500 கிராம்
  • மசால் பொடி                                       - 2 ஸ்பூன்
  • மிளகாய் பொடி                                   - 1 ஸ்பூன்
  • உப்பு                                                         - 1 ஸ்பூன்
  • கடலை மாவு                                       - ஒரு கைபிடி
  • எண்ணெய்                                           - வறுக்க தேவையான அளவு
செய்முறை:-
  • வெண்டைகாயை நன்றாக கழுவி ஈரம் போக துடைத்து நீள வாக்கில் கீறி விதை முழுவதையும் எடுத்து விடவும்.
  • விதை எடுத்த காயை விரல் நீளத்திற்கு துண்டுகள் போட்டு நறுக்கவும்.
  • நறுக்கிய  காயை ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு, கடலைமாவு,மிளகாய் பொடி, மசால் பொடி அனைத்தையும் போட்டு நன்றாக கலந்து 10 நிமிடம் வைக்கவும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து  எண்ணெய் ஊற்றி சூடானவுடன் சிறிது சிறிதாக காய் கலவையை அதில் போட்டு பொன்னிறமாக சிவந்து வந்தஉடன் எடுத்து தட்டில் போடவும்.
  • வெண்டைகாய் ஃப்ரை தயார். சாம்பார், ரசம் சாதத்திற்கு நன்றாக இருக்கும்.


முதல் நாள் மொட்டாக இருந்த போது எடுத்த படம் இது.


மறுநாள் மலர்ந்தும் மலராமல் பாதி மலரா உதிர்ந்து விட்டது. இதோட பெயர் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.

Read More...

உலர் பழ கேக் (Dry Fruit Cake)

9 comments
அத்திப்பழம் ரத்த விருத்திக்கு ஏற்ற பழம். ஆனா அதை அப்படியே சாப்பிடுவது அநேகருக்கு பிடிக்காது . ஆப்ரிகாட்டும் அத்தியின் மருத்துவ தன்மையை கொண்டதுதான்... இவை குடல் புழுக்களை அழிப்பதிலும் பித்தப்பை கற்களை போக்குவதிலும் இப் பழங்களின் பணி மகத்தானது.நரம்புகளை  வலுப்படுத்தும் பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளதால் ரத்த சோகையை   போக்கும்.எல்.டி .எல் என்னும் கெட்ட கொழுப்பை நீக்கும்.பேரீச்சை ரத்த விருத்திக்கு உகந்தது.அதிக இரும்பு சத்து கொண்டது. தாது விருத்திக்கு ஏற்றது . என்னதிது பழ கேக்குன்னு தலைப்பை போட்டு சயின்ஸ் பாடம் நடத்துறாங்கன்னு  நினைக்காதீங்க..:) மேல சொன்ன இந்த மூன்று பழங்களோட அன்னாசி பழமும் சேர்த்து செய்த கேக்தாங்க இது. இதை ஹெல்தி கேக்னு கூட சொல்லலாம். ஏன்னா.. மற்ற கேக் செய்முறையில முட்டை, வெண்ணை இவை இரண்டும் இடம் பெறும். இரண்டும் இல்லையென்றாலும் ஏதாவது ஓன்று கண்டிப்பாக இடம் பெறும். இந்த கேக்கில் அதுக்கு சப்டியூட்டா ஆலிவ் ஆயில் மட்டுமே சேர்த்து  செய்திருக்கேன். உங்களுக்கும் பிடிக்கும்னு நம்புறேன்..:)
தேவையான பொருட்கள்:-
  • மைதா மாவு                          - ஒரு கப்
  • ஆப்ரிகாட்                               - 100 கிராம்
  • அத்திப்பழம்                           - 100 கிராம்
  • பேரீச்சை                                - 100 கிராம்
  • அன்னாசி பழம்                    - அரை கப்
  • உப்பு                                          - அரை ஸ்பூன்
  • ஆலிவ் ஆயில்                     - 50 மில்லி
  • பேக்கிங் பௌடர்                 - 1ஸ்பூன்
  • தேன்                                         - 100 கிராம்
  • வெள்ளை எள்                       - சிறிது
  • பூசணி விதை                        - சிறிது
செய்முறை
  • அன்னாசிபழத்தை  மிக்சியில் அரைகுறையாக அரைத்து கொள்ளவும்.
  • உலர் பழங்கள் அனைத்தையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் நறுக்கிய உலர் பழங்களையும் அரைத்த அன்னாசி பழத்தையும் போட்டு உப்பு, பேக்கிங் பௌடர், தேன், ஆலிவ் ஆயில் இவைகளையும் சேர்த்து அடுப்பில் வைத்து மெலிதான தீயில் 3 நிமிடம் கலவையை வைத்து எடுக்கவும்.
  • சூடான கலவையை மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி ஆறவிடவும்.
  • ஆறிய  கலவையில் மைதாவை சேர்த்து நன்றாக கிளறி கொலகொலப்பாக இல்லாமல் சிறிது திக்காக கலந்து வைக்கவும்.
  • கப்பில் இரண்டு ஸ்பூன்களாக கலவையை வைத்து கலவையின் மேல் வெள்ளை எள், பூசணி  விதைகளை தூவவும்.
  • அவனை முற் சூடு செய்து 180 c யில் பேக் செய்து 20 அல்லது 25 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.
  • உலர் பழ கேக் தயார்.
Read More...

ரங்கோலி

10 comments
ரங்கோலி போடும் பொழுது அதன் அழகை கூடுதலாக காட்டுவது கலர் பொடிதானுங்க.. கலர்பொடியை கடையில் இருந்து வாங்கினாலோ அல்லது வீட்டிலேயே கலர் பொடி தயார் செய்தாலோ அதை அப்படியே ரங்கோலியின் மேல் போடாமல் அதை நன்றாக சல்லடையில் சலித்து எடுத்தால் மிக நைசாக பொடிவரும் .  இந்த பொடியை கோலத்தின் மேல், ரங்கோலியின் மேல்போட்டால் போட்ட டிசைன் பெயிண்ட் செய்தது போல் அழகாக வரும்.டிஷைனுக்கு ஏற்றவாறு கலர் பொடியை சல்லடையை உபயோகித்தும் தூவலாம். வேலை சுலபத்தில் முடியும்.அவ்வாறு போட்ட ரங்கோலிதான் இது.. எப்படி இருக்குன்னு சொல்லுங்க..;)




Read More...

ரகடா பேட்டீஸ்

12 comments
வடஇந்திய உணவு வகைகளில் ஒன்றான ரகடா பேட்டீஸ் இனிப்பும் புளிப்பும்மான ஒரு சிற்றுண்டி .. உருளையில் செய்ய கூடிய  இது வெஜ் பேட்டீஸ் ஆக சிக்கன் பேட்டீஸ் ஆக கீரை வகைகள் சேர்த்து செய்யும் பேட்டீஸாக செய்யலாம்.பட்டாணியில் செய்யும் ரகடாவை பேட்டீஸ் உடன் சேர்த்து சாப்பிடும்போது இனிப்பும் புளிப்பும்மாக மாலைநேர சிற்றுண்டிக்கு பொருத்தமாக இருக்கும்.

பேட்டீஸ்:-

தேவையான பொருட்கள் :-
  • உருளை கிழங்கு                 - கால் கிலோ
  • பிரட்                                          - 3 சிலைஸ்
  • பூண்டு                                     - சிறிது
  • காரன் ப்ளார்                         - 4 டீ ஷ்பூன்
  • உப்பு                                         - சிறிது
  • மிளகாய் பொடி                  - அரை ஸ்பூன்
செய்முறை:-
  • உருளை கிழங்கை வேக வைத்து தோல் உரித்து ரெடியாக வைக்கவும்.
  • பிரட்டை மிக்சியில் போட்டு உதிர்த்து வைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் உருளையை நன்றாக மசித்து வைக்கவும்.
  • அதனுடன் பிரட்,பொடியாக நறுக்கிய பூண்டு, கார்ன் ப்ளார் , மிளகாய் பொடி, உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்து உருண்டையாக உருட்டி வைக்கவும்.
  • அடுப்பில் தவாவை வைத்து சூடானவுடன் உருண்டைகளை தட்டையாக தட்டி எண்ணெய் தடவிய தவாவில் போட்டு வெந்தவுடன் திருப்பி போட்டு மொரு மொறுப்பாக சிவந்த வுடன் எடுத்து வைக்கவும்.
  • பேட்டீஸ் தயார்.

ரகடா:-

தேவையான பொருட்கள் :-
  • பட்டாணி    - ஒரு கப்
  • பல்லாரி                           - ஒன்று (பெரியது)
  • மசால் பொடி                  - 2 ஸ்பூன்
  • டொமாட்டோ சாஸ்   - சிறிது
  • லெமன் ஜூஸ்              - அரை ஸ்பூன்
  • மிளகாய் பொடி            - அரை ஸ்பூன்
  • உப்பு                                  - சிறிது
  • சர்க்கரை                        - அரை ஸ்பூன்
  • இஞ்சி                              - சிறு துண்டு
  • பூண்டு                            - 4இதழ்கள்
  • மல்லித்தழை               -சிறிது
செய்முறை:-
  • பட்டாணியை குக்கரில் வேக வைத்து முக்கால் பாகத்தை தனியாக எடுத்து வைத்து  கொள்ள வேண்டும்.
  • வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய பாதி வெங்காயத்தை போட்டு சுருள வதக்க வேண்டும்.
  • மசால் பொடி, மிளகாய் பொடியை வெங்காயத்தில் சேர்த்து 2 நிமிடம் வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து கிளற வேண்டும்.
  • மிக்சியில் இஞ்சி,பூண்டு, வெங்காயம், மீதியுள்ள பட்டாணி, மல்லி தழை சேர்த்து அரைக்க வேண்டும்.
  • அரைத்த விழுதை கொதிக்கும் குழம்பில் சேர்த்து அதனுடன் சர்க்கரை, தக்காளி சாஸ் சேர்த்து குழம்பு சிறிது கெட்டியானவுடன் இறக்கி விட வேண்டும்.
  • இறுதியில் கிரேவியில் அரை ஸ்பூன் எலுமிச்சை சாற்றை சேர்த்து மல்லித்தழை சேர்த்து கிளறி விட்டால் ரகடா தயார்.
இது எங்க வீட்டு செல்லம் ஸ்கூபி... 10 நாள் குட்டியாக இருந்த போது...

இப்போது 2 மாத குட்டியாக...
Read More...

கார்ன் சிக்கன்

17 comments
தேவையான பொருட்கள் :-
  • சிக்கன் - அரைகிலோ
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை ஸ்பூன்
  • மிளகாய் பொடி - 1 ஸ்பூன்
  • கார்ன் ப்ளார் - 2 ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • கார்ன் சிப்ஸ் - 50 கிராம்
  • முட்டை - ஒன்று
செய்முறை :-
  • சிக்கனை நன்றாக கழுவி உப்பு,மிளகாய் பொடி, இஞ்சி பூண்டு பேஸ்ட், முட்டை சேர்த்து கலந்து நன்றாக பிரட்டி விட்டு அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து தேவையான எண்ணெய் ஊற்றி சூடானவுடன் ஊறிய சிக்கனை போட்டு நன்றாக சிவக்க வறுக்க வேண்டும்.
  • கார்ன் சிப்சை மிக்சியில் பொடி செய்து வைத்து கொண்டு வறுத்த சிக்கனை சூடாக இருக்கும் போதே சிப்ஸ் தூளில் போட்டு பிரட்டி எடுத்து வைக்க வேண்டும்.
  • கார்ன் சிக்கன் தயார்.

Read More...

Quilling - Swan

24 comments
ரொம்ப நாளா க்வில்லிங் செய்ய முயற்சித்து அந்த கிட் கிடைக்காம க்வில்லிங் சரியா வரல்லை.. நம்ம ஏஜ்சலின் சொன்னாங்க டூத் பிக் முனை பகுதியை கீற்றாக வெட்டி பேப்பருக்கு கிரிப்பாக வைத்து எளிதாக க்வில்லிங் செய்யலாம்னு சொன்னாங்க . அதே முறையை பின்பற்றி நான் செய்த அன்னப்பறவை. நன்றி ஏஜ்சலின்... :)


Read More...

குந்தன் கோலம்

12 comments
அட்டையில் கோலம் வரைந்து பெவிகால் வைத்து குந்தன் கற்களை  கலர் கலராக ஓட்டினால் குந்தன் கோலம் ரெடி. இதை கற்பனைக்கு ஏற்றவாறு வரைந்து ஒட்டி பூஜை அறையில் வைக்கலாம். சுவர் அலங்காரமாக மாட்டலாம். பிரியமானவர்களுக்கு பரிசாக தரலாம். ஒரே கோலத்தை 5,6, எண்ணிக்கையில் செய்து அதை அளவில் பெரிய அட்டையில் நம் கற்பனைக்கு ஏற்றவாறு பெரிய கோலமாக ஒட்டி விழா காலங்களில் பயன் படுத்தலாம். நான் இதில் சுற்றிலும் கிளிட்டர் பேப்பரை ஒட்டி அலங்கரித்துள்ளேன்.

Read More...