க்ரிஸ்டல் ட்ராப்ஸ்

14 comments
தேவையான பொருட்கள் :-
  • வயர் கட்டர் 
  • கட்டிங் ப்ளேயர் 
  • கிரிஸ்டல் மணிகள் 
  • ஹூக் 
  • குண்டு பின் 
  • வயர் 

செய்முறை :-
வயர் கட்டரை கொண்டு வயரை தேவையான அளவு வெட்டி அதில் கிரிஸ்டல்  மணிகளை கோர்த்து ஹூக்கை வைத்து  ட்ராப்ஸ செய்து விடலாம்.. குண்டு பின்னில்  கிரிச்டலை கோர்த்து  ஹூக்கை  மாட்டி விட்டு கற்பனைக்கு ஏற்றவாறு  பல விதங்களில் ட்ராப்ஸ் செய்யலாம்.நான் செய்த சில மாடல்கள் உங்களின் பார்வைக்கு...

Read More...

வெண் பூசணி ரெய்தா

8 comments
தேவையான பொருட்கள்:-
  • வெண் பூசணி                                       - 250கிராம்
  • மாதுளை முத்துக்கள்                       - 1 கப்
  • மிளகாய் வத்தல்                                - 2
  • கருவேப்பிலை                                   - 2ஆர்க்கு
  • கடுகு                                                        - 1ஸ்பூன்
  • தயிர்                                                         - 1கப்
  • உப்பு                                                         - சிறிது
  • எண்ணெய்                                            - 1ஸ்பூன்
செய்முறை:-
  • பூசணி காயை  தோல் சீவி நறுக்கி கொண்டு சிறிது நீர் விட்டு வேக வைத்து  எடுத்து  கொள்ளவேண்டும்.
  • மாதுளையை வேக வைத்த பூசணியோடு  சேர்த்து உப்பு  போட்டு  கலந்து வைக்க வேண்டும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து போட்டு வெடித்த உடன்  மிளகாய் வத்தலை கிள்ளி போட்டு கருவேப்பிலை சேர்த்து பூசணி, மாதுளை கலந்த கலவையில் கொட்ட வேண்டும்.
  • இறுதியாக ஒரு கப் தயிரை அதனுடன் கலந்து நன்றாக பிரட்டி விட்டால் வெண் பூசணி ரெய்தா தயார்.
  • ரத்த சோகைக்கு இதை சாப்பிட்டால் மிகவும் பலன் தரும்.
Read More...

சேப்பங்கிழங்கு வறுவல்

21 comments
தேவையான பொருட்கள்:-
  • சேப்பங்கிழங்கு                             - அரை கிலோ
  • சோம்பு                                              - 1 ஸ்பூன்
  • மிளகாய் பொடி                             - 1 ஸ்பூன்
  • மஞ்சள் பொடி                               - சிறிது
  • இஞ்சி                                               - சிறிது
  • பூண்டு                                             - 5 இதழ்
  • உப்பு                                                 - தேவையான அளவு
  • தேங்காய்                                      - சிறிது
  • எண்ணெய்                                   - 200 மில்லி
செய்முறை:-
  • சேப்பங்கிழங்கை நீரில் நன்றாக கழுவி கழுவிய கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு கிழங்கு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு 5 நிமிடம் வேக விட வேண்டும்.
  • தோல் உரிக்கும் பதத்தில் வேக வைக்க வேண்டும்.
  • தோல் உரித்த கிழங்கை நீளமாக கட் பண்ண வேண்டும்.
  • வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடான உடன் நறுக்கிய கிழங்கை  போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும்.
  • மிக்சியில் தேங்காய்,இஞ்சி,பூண்டு ,சோம்பு போட்டு அரைக்க வேண்டும்.
  • வாணலியை அடுப்பில் வைத்து 1 ஸ்பூன்  எண்ணெய் ஊற்றி  சூடான உடன் மிளகாய் பொடி,மஞ்சள் பொடி போட்டு அதனுடன் அரைத்த விழுதை சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர்  உடன் உப்பையும் போட்டு சுண்டும் வரை வதக்க வேண்டும்.
  • வதங்கிய கலவையில் பொன்னிறமாக வறுத்த  கிழங்கை போட்டு நன்றாக பிரட்டி விட்டு கலவை நன்கு சேர்ந்த உடன் இறக்கி வைக்க வேண்டும்.
  • சேப்பங்கிழங்கு வறுவல் தயார்.
  • அனைத்து வகை சாதத்திற்கும் இது பொருத்தமானது .
Read More...

வெஜ் நூடுல் ஃப்ரை

10 comments
தேவையான பொருட்கள்:-
  • ரைஸ் நூடுல்                               -1 பாக்கெட்
  • முட்டைகோஸ்                          -  சிறிது
  • காரட்                                               - 1
  • குடை மிளகாய்                           - 1
  • சோயா சாஸ்                               - 2 ஸ்பூன்
  • சில்லி சாஸ்                                - 2 ஸ்பூன்
  • பல்லாரி வெங்காயம்              - 1
  • இஞ்சி ,பூண்டு பேஸ்ட்            - சிறிது
  • சீனி                                                  - 2 ஸ்பூன்
  • ஆலிவ் ஆயில்                           - 2 ஸ்பூன்
  • ஃ ப்ரை பண்ண தேவையான ஆயில்    - சிறிது
செய்முறை:-
  • முதலில் முட்டைகோஸ், காரட், குடை மிளகாய் ஆகியவற்றை மிக பொடியாக  கட் பண்ணி கொள்ள வேண்டும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்துக்கொண்டு அதனுடன் சில்லி சாஸ், சோயா சாஸ் கலந்து இஞ்சி, பூண்டு பேஸ்ட்டுடன் ஆலிவ் ஆயிலையும் சேர்த்து இறுதியில் சீனியையும் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.
  • இதை தனியாக பிரிட்ஜில் வைக்க வேண்டும்.
  • சுமார் 4 மணி நேரம் கழித்து இந்த கலவை நீர் விட்டிருக்கும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து வேண்டிய ஆயிலை ஊற்றி சூடான உடன் நூடுல்லை உடைக்காமல் அப்படியே முழுதாக போட்டு கோல்டன் கலர் வந்த உடன் ஆயிலை வடித்து மொறு மொறுப்பான நூடுல்லை தனியே எடுக்க வேண்டும்.
  • சாப்பிட பரிமாறுவதற்கு 5 நிமிடங்களுக்கு முன் பரிமாறும் பவுலில் சிறிது நூடுல்லை வைத்து அதில் பொடியாக நறுக்கிய அனைத்து காய்களையும் சிறிது வைத்து அதன் மேல் வெங்காயம், சோயா, சில்லி சாஸ் கலவையை சேர்த்து நன்றாக பிரட்டி விட்டு பரிமாற எடுத்து வைக்க வேண்டும்.
  • இதில் காய்களை அப்படியே வேக வைக்காமல் சேர்ப்பதால் சத்துக்கள் வீணாகாமல் ஆரோக்கியமான உணவாக சாப்பிடலாம்.
Read More...

தாழம் பூ

17 comments
       வீட்டின் பக்கத்தில் இருந்த மரத்தில் இருந்த பறவைகள் கத்திய ஒலியும், சேவலின் கொக்கரக்கோ கூவலும் கங்காவிற்கு காலை விடியலை உணர்த்தியது. படுக்கையில் இருந்து எழுந்தவள் இரண்டு நாட்களாக கண்ணம்மா வேலைக்கு வரவில்லை. இன்றாவது வருவாளா.. உடம்பு சரியாகி இருக்கும், வருவாள் என்று எண்ணிக் கொண்டே காலை கடன்களை முடித்தவள் மற்ற வேலைகளை செய்ய சுறு சுறுப்பாக ஆயத்தமானாள். காபி டிகாஷனை இறக்கி பால் சேர்த்து நுரை பொங்க ஆற்றிக் கொண்டே கணவனை எழுப்பினாள். அவளுடைய கணவன் சதாசிவம் காபியை குடித்து முடிக்கும் வரை அருகில் இருந்தவள் படுக்கை அறையை சுத்தம் செய்து கொண்டே மெல்ல கணவனிடம் ஏங்க... இந்த வாரம் நல்ல நாள் பார்த்து வளைகாப்பு செய்து நம்ம சுமதியை வீட்டுக்கு அழைத்து வரணும், இப்ப அவளுக்கு இது ஏழாவது மாதம் என்றாள். சதாசிவமும் சரி அழைத்து வருவோம் என்றார்.

       கிறீச்சென்று கேட் திறக்கும் சத்தம் கேட்டது. கண்ணம்மாதான் கேட்டை திறந்து வந்து கொண்டிருந்தாள். அப்பாடா... வந்தாச்சா.. உடம்பு சுகமாயிருச்சா... நீயில்லாம வேலையே ஆக மாட்டேங்குது கண்ணம்மா.. இந்தா முதல்ல இந்த காபியை குடி, அடுத்து வேலையை பாக்கலாம் என்றாள். காலை டிபன் தயார் பண்ணி கொண்டிருந்த வேளையில் அம்மா.. நம்ம பாப்பாவை எப்ப கூப்பிட போறீங்க..? கல்யாணத்தப்ப பாத்தது நம்ம சுமதியம்மாவை..என்றாள். ஆமா.. கண்ணம்மா இந்த வாரம் வளைகாப்பு வச்சிருக்கு.. நீயும் கூட வா.. என்றாள். அம்மா நா ஒரு மனுஷின்னு என்னைப் போயி கூப்பிடறீங்க.. வெற்றிலை கரை படிந்த பல் தெரிய வெள்ளந்தி சிரிப்புடன் கேட்டாள் கண்ணம்மா.ஏன் கண்ணம்மா நீ வயசுல பெரிய மனுஷி.. சுமதிய தூக்கி வளர்த்தவ.. தொடர்ந்து ரெண்டு வருஷம் ஒரு வீட்ல வேலை பார்க்க முடியாம வேற வீட்டை பார்த்து போற இந்த காலத்தில நீ இந்த வீட்டுக்கு இருபது வருஷமா தினம் வந்து வேலை பாக்குறே... நீயும் இந்த வீட்டை சேர்ந்த ஒரு உறவுக்கார பெண்தான். அதனால இந்த வாரம் சுமதிய போய் பார்த்து வளைகாப்பு செய்து அழைத்து வருவோம் என்றாள். இதை கேட்டு சிரித்துக் கொண்டே சரிம்மா வர்றேன் என்று சொல்லி விட்டு வேலைகளை செய்ய துவங்கினாள்.

       வளைகாப்பிற்கு சுமதியை அழைக்கும் அன்று கண்ணம்மா கொப்புகொண்டை போட்டு கனகாம்பரம் சூடி கண்டாங்கி சேலையோடு வீட்டிற்கு வந்து மாங்கு மாங்கென்று சாதவகைகள் செய்து கங்காவிற்கு அனைத்து உதவிகளையும் செய்து அனைவரோடு சேர்ந்து ஊருக்கு கிளம்பினாள். மாப்பிள்ளை வீட்டில் கலகலப்பாக அனைவரையும் வரவேற்று உபசரித்தனர்.சுமதிக்கு கண்ணம்மாவின் உடை, வெற்றிலை வாய் இவையெல்லாம் பிடிக்காமல் கங்காவின் காதோரம் மெல்ல கிசு கிசுப்பாக ஏம்மா.. இவளையெல்லாம் கூட்டிட்டு வந்தே.. மாமியார் வீட்டில் என் மானம் கப்பல் ஏறிடும் என்று கோபத்துடன் கேட்க முறைப்புடன் கங்கா மகளை சும்மா இருடி அவ உன் மேல எவ்வளவு அக்கறையா இருக்கா... அந்த பாசம் எனக்குத்தான் தெரியும், பேசாம வளையல் போட உட்காரு என்று கடிந்து சொல்ல மறு பேச்சு பேசாமல் முறைப்புடன் மனையில் உட்கார்ந்தாள். எல்லோரும் வளையல் போட்டு ஆசீர்வதிக்க கங்கா, கண்ணம்மாவை வா நீயும் வளையல் போட்டு விடு என்று கூற கண்ணம்மா வெற்றிலை சுண்ணாம்பு மணக்க ஒரு பாட்டை பாடி வளையல் போட்டு ஆசீர்வாதம் செய்தாள். சுமதி நெளிந்து கொண்டே வேண்டா வெறுப்போடு ஆசீர்வாதத்தை ஏற்றுக் கொண்டாள். அம்மாவின் வீட்டிற்கு வந்த பின் சுமதிக்கு கண்ணம்மா மேல் வெறுப்பு அதிகமாகியது. ஆனால் கண்ணம்மா தன் நிலையில் சிறிதும் மாற்றம் இல்லாமல் சுமதிக்கண்ணு நேரா படுக்காதே.. ஒரு பக்கமாவே படுத்து எந்திரி.. வயத்தை சொறியாதே.. உன் பிள்ளைக்கு தலை முடி நிறைய போல.. அரிக்கத்தான் செய்யும் அதனால தேங்காய் எண்ணெய் தடவி விடுறேன்.. கீழே உட்காராதே, சேர்ல உட்கார்ந்து எந்திரி கண்ணு.. என்று தினமும் அக்கறையாக சொல்வதை கடுப்புடன் அம்மாவிற்காக சகித்து கொண்டாள். நாட்கள் நகர்ந்து பிரசவ காலம் நெருங்க டாக்டர் பரிசோதித்து ஒரு வாரத்தில் குழந்தை பிறந்து விடும் என்று கூறி அனுப்பினார்.

       மறுநாள் பக்கத்து ஊரில் உறவினர் யாரோ இறந்து விட கங்கா காலையில் அங்கு கிளம்பினாள் நாளை நான் வந்து விடுவேன், அதுவரை சுமதிக்கு துணையாக இரு.. அய்யாவும் சுமதிக்கு துணையாக வீட்டில் தான் இருப்பார் என்று கூறி கிளம்பினாள். அன்று மதிய உணவு முடித்து விட்டு சிறிது ஓய்வாக சுமதி அமர்ந்திருந்தாள். சிறிது நேரத்தில் அவளுக்கு வலி தோன்ற வலியை பொறுத்துக் கொண்டு அப்பாவிடம் கூற அவர் டாக்சியை கூட்டி வருகிறேன் என்று கண்ணம்மாவிடம் சொல்லி விட்டு வெளியே கிளம்பிய ஐந்து நிமிடத்தில் பதற்றத்துடன் திரும்பினார். யாரோ அரசியல் பிரமுகர் ஒருவரை வெட்டி கொலை செய்து விட்டார்களாம்.. அதனால் எந்த பேருந்தும் இயங்காதுன்னு சொல்கிறார்கள். உன் அம்மா ஊரில் இருந்து வருவது எப்படியோ... பஸ்,டாக்ஸி எல்லாமே ஸ்டிரைக் என்று பதறினார்.. அவர் சொல்லி கொண்டிருக்கும் போதே சுமதிக்கு வலி அதிகமாகி துடிக்க ஆரம்பித்து விட்டாள்.

       கண்ணம்மா பிரசவம் பார்த்த அனுபவத்தில் சுமதிக்கு ஆதரவாக பேசி அவளின் வயிற்றை தொட்டு பார்த்தே பயப்படாதே கண்ணு.. சுகமா குழந்தை பிறந்திடும்,அஞ்சு நிமிஷத்தில வெண்ணெய், மிளகு, பனங்கல்கண்டு போட்டு கஷாயம் போட்டு தரேன்.. மடக்குனு குடிச்சிடு... என்று ஓடிப்போய் கஷாயம் போட்டு குடிக்க கொடுத்தாள். சுமதி மறுக்க அவளின் தந்தை சமாதானபடுத்தி குடிக்க செய்தார். அடுத்த பத்து நிமிடத்தில் வலி அதிகமாகி சுமதி அலற ஆரம்பிக்க சதாசிவத்திடம் அய்யா.. வண்டி ஏதும் கிடைக்கலியேன்னு கவலை படாதீங்க,சுமதிக்கண்ணுக்கு சுக பிரசவம் ஆயிடும்அய்யா... நான் பாத்துக்கிடுதேன். ஒன்னும் ஆகாது கொஞ்சம் வெளியே இருங்க.. என்று சொல்லிக்கொண்டே மருத்துவரை போல பிரசவம் பார்க்க ஆரம்பித்து விட்டாள். சிறிது நேரத்தில் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு சதாசிவம் சந்தோஷத்தோடும் அதே சமயம் சுமதிக்கு என்னவோ என்ற பயத்தோடும் அவஸ்தை பட்டுக் கொண்டிருந்தார். கண்ணம்மா குழந்தையை குளிப்பாட்டி தொப்புள் கொடி அறுத்து சுமதியின் அருகில் படுக்க போட்டு விட்டு வெளியே வந்து அய்யா.... உங்க பேரனை போய் பாருங்க செவேல்னு ராசா மாதிரி பிறந்திருக்கான் என்று கூறினாள். சிறிது நேரத்தில் ஒரு காட்டன் சேலையை எடுத்து கொண்டு உள்ளே வந்தவள் கண்ணு.. இந்த சேலையை இடுப்பில கட்டி விட்டா வயிறு எப்பவும் போல முந்தி இருந்த மாதிரி இருக்கும் என்று சொல்லிக் கொண்டே சுமதிக்கு உதவ சேலையை கழுத்தில் போட்டு கொண்டு கைத்தாங்கலாக சுமதியை தூக்கி விட்டாள்.

       சுமதியின் மனதில் கண்ணம்மாவின் கழுத்தை சுற்றி போட்ட சேலை ஸ்டெதஸ்கோப் போல் தெரிய அவளின் தூக்கி கட்டிய கொப்புக்கொண்டை ஒரு நர்ஸின் தலை தொப்பி போல் தெரிய ஒரு டாக்டரும் நர்ஸும் பக்கத்தில் இருக்கும் மன தைரியம் வர சுமதியின் மனதில் ஏனோ
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்.
என்ற குறளின் வரிகள் நினைவு வர கண்களில் கண்ணீர் வர விசும்பினாள். கண்ணம்மா பதறிப் போய் ஏங்கண்ணு... அம்மா பக்கத்துல இல்லாம போயிட்டாங்களேன்னு வருத்தப்படுறியா.. இந்த டிரைக் (ஸ்டிரைக்)கொஞ்ச நேரத்தில முடிஞ்சுடும்... பஸ்,கார் எல்லாம் ஓட ஆரம்பிச்சுடும்.. அம்மா இன்னிக்கி ராத்திரி வந்துருவாங்க.. என்று காரணம் புரியாமல் அவளை சமாதான படுத்தி அவளின் அடுத்த தேவைகளை செய்ய ஆயத்தமானாள்.
Read More...

முன்றாவது விருது

31 comments
வை.கோபால கிருஷ்ண அண்ணன் அடுத்து அடுத்து இரண்டு விருது கொடுத்து எனது வலை பூவை சிறப்பித்துள்ளார். இரண்டாவது விருதாக SUNSHINE BLOGGER விருதையும்
மூன்றாவது விருதாக LIBESTER விருதை கொடுத்து எனது வலை பூவை சிறப்பித்துள்ளார்கள்.அண்ணனுக்கு எனது பாராட்டுக்கள்..! மிக்க நன்றியண்ணா..! இந்த விருதை நான் எனது வலையுலக உறவுகளுக்கு பகிர்கின்றேன்.

Read More...

குழாய் புட்டு

18 comments

தேவையான பொருட்கள்:-
  • பச்சரிசி மாவு              -    250 கிராம்
  • சர்க்கரை                      -  150 கிராம்
  • தேங்காய் துருவல்  - அரை மூடி
செய்முறை:-
  • பச்சரிசி மாவை லேசாக வறுத்து பாத்திரத்தில் போட்டு தண்ணீரை சிறிது சிறிதாக விட்டு கட்டி இல்லாமல் உதிரியாக பிசைந்து கொள்ள வேண்டும்.
  • புட்டு குழாய் பாத்திரத்தை எடுத்து அடியில் உள்ள பாத்திரத்தில் பாதி அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்க வேண்டும்.
  • புட்டு குழாயில் சிறிது வெண்ணெய் எடுத்து உட்புற பகுதியில் தடவி சிறிது மாவை எடுத்து குழாயில் போட்டு அதன் மேல் சிறிது தேங்காய் துருவல் அதன் மேல் சிறிது சர்க்கரை என போட்டு மூடி வைத்து மூடி புட்டு குழாய் பாத்திரத்தின் மேல் புட்டு குழாயை வைத்து ஆவியில் மாவு வேகும் வரை சுமார் 10 நிமிடங்கள் வைக்க வேண்டும்.
  • புட்டு குழாயை தனியாக எடுத்து ஒரு தட்டில் வைத்து பிளாஸ்டிக் குச்சியினால் புட்டு மாவை அச்சாக குழாயில் இருந்து வெளியே தள்ள வேண்டும்.குழாய் புட்டு தயார்.
  • இதை வாழை பழத்துடனோ,கடலை கறியுடனோ சாப்பிட சுவையாக இருக்கும்.
Read More...