தேவையான பொருட்கள்:-
- அரிசி - 500 கிராம்
- தயிர் - 100 கிராம்
- சின்ன வெங்காயம் - 20
- புதினா இலை - ஒரு கைபிடி (ஆய்ந்தது)
- பட்டை - ஒன்று
- கிராம்பு - 3
- அன்னாசி பூ - 2
- பிரிஞ்சி இல்லை - 1
- ஏலக்காய் - 2
- இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
- நெய் - 50 கிராம்
- முந்திரி - 10 கிராம்
- பச்சை மிளகாய் - 5
- தேங்காய் பால் - 100 மில்லி
செய்முறை:-
- அரிசியை நன்றாக கழுவி 10நிமிடம் ஊறவிடவேண்டும்.
- குக்கரை அடுப்பில் வைத்து நெய்யை ஊற்றி காய்ந்த உடன் பட்டை, கிராம்பு, அன்னாசிபூ, பிரிஞ்சி இலை, நசுக்கிய ஏலக்காய், போட்டு வதக்க வேண்டும்.
- அடுத்து சின்ன வெங்காயம், வெட்டிய பச்சை மிளகாய்,போட்டு வதக்கி பின் இஞ்சி,பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.
- இதனுடன் தயிரையும், தேங்காய் பாலையும் சேர்த்து நன்றாக கலக்கி விட்டு புதினா இலைகளை போட்டு 500கிராம் அரிசிக்கு தேவையான நீரை (4 டம்ளர் ) விட்டு சிறிது உப்பு சேர்த்து கொதித்த பின் அரிசியை போட்டு குக்கரை மூடி 3 விசில் வந்த உடன் இறக்கி விட வேண்டும்.
- 5 நிமிடம் கழித்து குக்கரை திறந்து சிறிது நெய்யில் முந்திரியை போட்டு வறுத்து புலாவில் கொட்டி கிளறி விட வெள்ளை புலாவ் தயார்.
- குருமா, ரெய்தா உடன் பரிமாற சுவையாக இருக்கும்.