தூள் பஜ்ஜி

2 comments

தேவையான பொருட்கள்:-

  • கடலை மாவு                           - நூறு கிராம்
  • கார்ன் ப்ளார்                             - 2  ஸ்பூன்
  • வெங்காயம்                               - கால் கிலோ
  • இஞ்சி                                           - விரலளவு
  • பச்சை மிளகாய்                      - 5
  • பூண்டு                                          - 5 பல் 
  • உப்பு                                              - தேவையான அளவு
  • கேசரி கலர்                               - சிறிது
  • எண்ணெய்                                  - தேவையான அளவு


செய்முறை:-

  • ஒரு பாத்திரத்தில் வெங்காயம் உப்பை போட்டு நன்கு பிசறி,கடலை மாவு,கேசரி கலரை அதனுடன் போட்டு பிசைந்து கொள்ளவேண்டும்.
  • இஞ்சி,பூண்டு,பச்சைமிளகாய்,இவற்றை விழுதாக அரைக்க வேண்டும்.
  • அரைத்த விழுதை மாவு கலவையுடன் போட்டு பிசைந்து கொள்ளவேண்டும்.
  • வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி நன்கு சூடானவுடன் மாவை சிறிது சிறிதாக போட்டு எடுத்து மொறு மொறுப்பாக வெந்தவுடன் ஒரு தட்டில் எண்ணெயை நன்கு வடித்து விட்டு எடுக்க வேண்டும்.

Read More...

குக்கர் அல்வா

14 comments
                    அல்வா செய்வதற்கு கோதுமையை ஊறவைத்து அரைத்து பால் எடுத்து செய்வதற்கு நேரமாகும். கோதுமை மாவிலேயே இப்படி செய்தால் எளிதாக இருக்கிறதென்று  நான் இந்த முறையில்தான் செய்வேன்.நெய் அதிகமாக சேர்த்தால் கொலஸ்ட்ரால் பிராப்ளம் வரும். ஆலிவ் ஆயில் நல்லது,வாசனைக்காக சிறிது நெய் சேர்த்து செய்தேன்.வாங்க!அல்வா சாப்பிடுங்க.:-)

தேவையான  பொருட்கள்:-
கோதுமை மாவு           - ஒரு கப்
சீனி                                    - 2 கப்
கேசரி கலர்                   - சிறிது 
முந்திரி                            - 50 கிராம்
ஆலிவ் ஆயில்           - ஒரு கப் + 2 ஸ்பூன் நெய்


செய்முறை:-
  • ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு சிறிது தண்ணீர் விட்டு கரைத்து கொள்ள வேண்டும்.
  • குக்கரில் சிறிது தண்ணீர் விட்டு அதனுள்  மாவு பாத்திரத்தை வைத்து மூடி மாவை வேகவிட வேண்டும்.
  • ஒரு விசில் சத்தம் வந்த உடன் இறக்கி மாவை வெளியே எடுத்து ஆறவிட வேண்டும்
  •  ஆறியமாவை மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவேண்டும்.


  •  வாணலியை அடுப்பில் வைத்து அரை டம்ளர் தண்ணீருடன் கேசரிகலர் கலந்து சீனியை சேர்த்து கரையவிட்டு அதனுடன் மிக்சியில் உள்ள மாவை போட்டு நன்றாக கிளற வேண்டும்.  
  •  பக்கத்து அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து ஆலிவ் ஆயில்,நெய் ஊற்றி சூடுபண்ணி,அல்வா கிளறி முடியும்வரை சூடாக இருக்கும்மாறு அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும்.

  • மாவு லேசாக கெட்டி படும் போது கொதிக்கும் எண்ணெய்யை ஒரு கரண்டியால் எடுத்து மாவின் மேல் ஊற்றி கிளற வேண்டும்.
  • எண்ணெய்யை ஊற்றி கிளற கிளற மாவு எண்ணெய்யை உள்வாங்கும்.
  • அப்பொழுது மாவும் தளதள வென்று பாத்திரத்தில் ஒட்டாமல் கலர் மாறி பளபளப்பாக வரும்.
  • கடைசி கரண்டி எண்ணெய்யை விடும் பொழுது மாவு எண்ணெய்யை உள்வாங்கி கிளற கிளற இரண்டு நிமிடத்தில்மாவிலிருந்து  எண்ணெய் பிரிந்து வரும்.
  • இந்த பக்குவம் வந்த உடன் வாணலியை அடுப்பில் இருந்து இறக்கிநெய்யில் வறுத்த முந்திரியை சேர்த்து கிளறி  விட வேண்டும்.

Read More...

முந்திரி பிஸ்கட்

7 comments

 தேவையான பொருட்கள்:-
  • முட்டை வெள்ளை கரு     - 3
  • முந்திரி                                    - 25   கிராம்                   
  • சீனி                                           - 50 கிராம்
  • கோதுமை மாவு                - 100 கிராம்
  • வெனிலா எசன்ஸ்          2 துளி
  • பட்டர்                               - சிறிது
செய்முறை:-
  •     முட்டையை உடைத்து வெள்ளை கருவை மட்டும் தனியே ஒரு பாத்திரத்தில் எடுத்து நுரை வர நன்கு அடித்து பட்டர்,சீனி ,எசன்ஸ்  இவற்றை முட்டையுடன் சேர்த்து நன்றாக கலந்து பொடித்த முந்திரி ,கோதுமை மாவை இதனுடன் கலந்து வெண்ணை தடவிய தட்டில் மாவுக்கலவையை ஒரு ஸ்பூனால் சிறு சிறு வட்டமாக ஊற்றி அவனில் 200  டிகிரி  பாரன்ஹீட்டில் 15 நிமிடங்கள்  வைத்து எடுக்க வேண்டும்.
Read More...

ஸ்டஃப்ட் உருண்டை குழம்பு

Leave a Comment
தேவையான பொருட்கள்:-         
  • கடலை பருப்பு        - 2கப்        
  • காலிபிளவர்           - சிறிய பூ                                        
  • கார்ன்ப்ளார்           - 3 ஸ்பூன்
  • பனீர்               - 1/2 கப்
  • உப்பு               - சிறிது
  • வெங்காயம்          - 10
  • பூண்டு              - 8 இதழ்கள்
  • தக்காளி            - 2      
  • பெருஞ்சீரகம்        - 1ஸ்பூன்
  • இஞ்சி               - சிறு துண்டு
  • மிளகாய் பொடி       - 1 ஸ்பூன்
  • தேங்காய்         - 1/4 மூடி
  • கரம் மசாலா பொடி - 2ஸ்பூன்
  • எண்ணெய்            - 2 குழி கரண்டி
  • எண்ணெய்             - பொரிக்க தேவையான அளவு
  • கடுகு,உளுந்து    -சிறிது      
     செய்முறை:-

    •  ஒரு மணி நேரம் கடலை பருப்பை ஊற  வைக்க வேண்டும்.
    • காலிபிளவரை மிக பொடிதாக நறுக்கி கொள்ள வேண்டும்.
    • . நறுக்கிய காலிபிளவரை வெதுவெதுப்பான நீரில் போட்டு நீரை நன்றாக வடிய விட வேண்டு   மிக்சியில் கடலை பருப்பை நீரை வடித்து விட்டு போட்டு உப்பு,பெருஞ்சிரகம்,பூண்டு,சேர்த்து கொர கொரப்பாகவும் இல்லாமல் வழுவழுப்பாகவும் இல்லாமல் மீடியமாக  அரைக்க வேண்டும். 
    • இதனுடன் காலிபிளவரை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.
    •   இந்த கலவையில் கார்ன்  .பிளாரை சேர்த்து பிசைய வேண்டும்.
    • பிசைந்த கலவையை உருண்டையாக உருட்டி நடுவில் ஒரு  குழி செய்து 
    . பனிரை அதில் வைத்து ஸ்டப் செய்ய வேண்டும்.
    •   இதே போல் கலவை முழுவதையும் செய்து எண்ணையில் பொரித்து எடுக்க வேண்டும்.
    • .,  மிக்சியில் தேங்காய்,பெருஞ்சீரகம்,பூண்டு,இஞ்சி,அனைத்தையும் போட்டு அரைக்கவேண்டும்.    
    • வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடானதும் கடுகு,உளுந்து போட்டு தாளித்து வெங்காயம்,தக்காளி போட்டு வதக்கி ,உடன் கரம்மசாலா சேர்த்து வதக்கி ஒரு நிமிடம் நன்றாக பிரட்டி விட்டு மிக்சியீல் அரைத்த விழுதை போட்டு சிறிது உப்புடன் தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும்.
    • நன்றாக கொதித்து வரும் பொழுது எண்ணெயில் பொறித்த உருண்டைகளை போட்டு கிளறி மல்லி தழை தூவி இறக்கி விட வேண்டும்.




    Read More...