மயக்கும் மார்கழி

8 comments

மார்கழி மாதத்தை கடவுளை வழிபடும் மாதமாக அனைவரும் அதிகாலையில்  எழுந்து குளித்து கோவிலுக்கு செல்கின்றனர்.
முன்பனிக்காலம் மார்கழி தொடங்கி விட்டது. இதை உத்தராயண காலம் என்று சொல்வார்கள். சூரியன் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி பயணிக்கும் காலம். தேவர்களின் விடிகாலை பொழுது. ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயன காலம், தேவர்களின் இரவு பொழுது..தை முதல் ஆனி வரை பகல் பொழுது. அந்த வகையில் மார்கழி மாதம் தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்த வேளையாக கருத படுகிறது. எனவே இந்த மாதம் அனைவரும் காலை 4 மணிக்கு எழுந்து குளித்து வாசலில் கோலம் போட்டு வீட்டில் விளக்கேற்றி பின் அருகில் இருக்கும் கோவிலுக்கும் சென்று வருவர். அதனால் இந்த மாதம் சுறுசுறுப்பான மாதமாக காலை வேளையில் இருக்கும். பஜனை கோஷ்டியும், கோவில்களில் முழங்கும் பக்தி பாடல்களும் அனைவருக்கும் பக்தியையும் சுறுசுறுப்பையும் கொடுக்கும். அறிவியல் ரீதியாக  பார்க்கும் பொழுது அதிகாலை பொழுது கோவிலுக்கு செல்வோருக்கு அந்த வேளையில் ஓசோன் படலம் அதிகமாக இருப்பதால் ஆக்சிஜன் அதிகமாக கிடைத்து ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும் ஒரு காரணமாக உத்தராயண காலத்தை சொல்லலாம்.



                                       இந்த சீசன்ல மணம் தரும் மலர்கள் கிடைப்பது மிக அரிது..அதனால அதிகாலை சுவாமி தரிசனத்திற்கு படத்தில் இருக்கும் இந்த மலர்களைதான் பூஜைக்கு கொடுக்க போகிறேன்..தோட்டத்தில் அதிகமாக இந்த மலர்கள் பூத்திருப்பதும் வண்ணத்துப்பூச்சிகள் அதிகமாக பறந்ததும் போட்டோ எடுத்தாச்சு..:) கேந்தி பூ என்று இங்க சொல்லுவாங்க..இந்த பூவிற்கு நீங்க என்ன பேர் சொல்வீங்க.
பூ பூவா பறந்து போகும் வண்ணத்து பூச்சியக்கா..நீ பளபளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா..
என்ன.. துருதுருன்னு பாக்குற..
தப்பிக்க எங்க வழி இருக்குனு பாக்குறேன்..நீ என்னடான்னா அக்கா..சொக்கா..னு பாடுறே. எனக்கு பயத்துல கக்கா..வருது.
Read More...