வீட்டில் எப்போதும் சுக்கு ,மிளகு,இஞ்சி,தேன்,
ஓமம்,வெந்தயம் ,வாங்கி வைத்து கொண்டால் நாமே கை மருத்துவம்செய்து பார்க்கலாம்.தற்காலிக நிவாரணம் கிடைக்கும்.சில சமயங்களில் மருத்துவ செலவுக்கு அவசியமே இல்லாமல் காப்பாற்றும்.இதில் பின் விளைவுகள் எதுவும் இருக்காது.இதை கொண்டே சாதாரண பிரச்சனைகளை சிக்கனமாக சமாளிக்கலாம்.
அவற்றில் சில...
ஓமம்,வெந்தயம் ,வாங்கி வைத்து கொண்டால் நாமே கை மருத்துவம்செய்து பார்க்கலாம்.தற்காலிக நிவாரணம் கிடைக்கும்.சில சமயங்களில் மருத்துவ செலவுக்கு அவசியமே இல்லாமல் காப்பாற்றும்.இதில் பின் விளைவுகள் எதுவும் இருக்காது.இதை கொண்டே சாதாரண பிரச்சனைகளை சிக்கனமாக சமாளிக்கலாம்.
அவற்றில் சில...
- பூண்டு பல் எடுத்து நசுக்கி சாறெடுத்து அத்துடன் வெண்ணெய் கலந்து தீக்காயத்தின் மேல்தடவினால் குணம்ஆகும்.
- சளிக்கு கற்பூரவள்ளி இலையுடன்(ஒரு இலை) 3 மிளகு சேர்த்து சாப்பிட சளித்தொல்லை தீரும்.
- எலுமிச்சம் பழம் சாற்றுடன் தேனையும் இஞ்சி சாறையும் கலந்து சாப்பிட வாந்தி நிற்கும்.
- ஒரு கப் பூசணி துருவல் தயிரில் கலந்து சாப்பிட உடல் எடை குறையும்.
- வறட்டு இருமல் நிற்க பாலில் அரை ஸ்பூன் சுக்குப்பொடி போட்டு 1 ஸ்பூன் தேனுடன் கலந்து பருகி வந்தால் இருமல் நிற்கும்.
- ஜலதோசம் ,தலைவலி,நீங்க சின்ன வெங்காயம் 4 ,5 ,எடுத்து தண்ணீர் விடாமல் அரைத்து எலுமிச்சம் பழ சாற்றில் கலந்து நெற்றியில் பற்று போட குணம் ஆகும் .
- வாய் புண்ணிற்கு தேங்காய் பாலை 2 ஸ்பூன் வாயில் விட்டு அப்படியே வைத்திருந்து 2 நிமிடம் ஆனதும் சாப்பிடலாம் .
- வெந்தயத்தை தயிரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அரைத்து தலையில் தேய்த்து குளிக்க கண் எரிச்சல் போகும்.