எனது மகன் பிரதீப் .இவருக்கு கிரியேட்டிவ் மைன்ட் அதிகம். மார்க்கட்டில் வாங்கிய பச்சை மிளகாயில் சில காய்கள் வட்டமாக சுருண்டு இரட்டை காய்களாக இருந்தன .அவற்றை பிரதீப்பிடம் கொடுத்தேன் .அதை நடனம் ஆடும் மிளகாய் பெண்ணாக உருவாக்கியதைதான் நீங்கள் போட்டோவில் பார்க்கின்றீர்கள் .நன்றாக உள்ளதா...கற்பனையில் உருவானவைகளை பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் .கற்பனை தொடரும்...
இஞ்சி சட்னி
தேவை யான பொருட்கள் :
- மிளகாய் வத்தல் - 5
- புளி - நெல்லி அளவு
- தேங்காய் - சிறிது
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
- எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி
- கருவேப்பிலை - ஒரு ஆர்க்கு
செய்முறை :
- இஞ்சியை நன்றாக கழுவி தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
- தேங்காயை பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும்.
- அடுப்பில் வாணலியை வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி இஞ்சி ,தேங்காயை அதில் போட்டு சிவப்பு நிறம் வரும் வரை வறுத்து பின்பு புளி, வத்தல், கருவேப்பிலை, பெருங்காயம்,போட்டு வதக்கி மிக்சியில்சிறிது உப்புடன் வதக்கிய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும்.
- இதனுடன் சிறிது எண்ணையில் கடுகு,உளுந்து தாளித்து சேர்க்கவேண்டும்.
.
இட்லி சாம்பார்
தேவையான பொருட்கள் :
- துவரம் பருப்பு - ஒரு கப்
- மஞ்சள்பொடி - ஒரு சிட்டிகை
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
- சின்ன வெங்காயம் - பத்து
- தக்காளி - இரண்டு
- மிளகாய் பொடி - ஒரு ஸ்பூன்
- கருவேப்பிலை,மல்லி தழை - சிறிது
- எலுமிச்சை - அரை முடி
- கடுகு -ஒரு ஸ்பூன்
- எண்ணெய் - இரண்டு ஸ்பூன்
- துவரம் பருப்பை நன்றாக கழுவி குக்கரில் 2 கப் தண்ணீர் விட்டு அதில் மஞ்சள்பொடி,பெருங்காயத்துடன் பருப்பை சேர்த்து 3 விசில் வரும் வரை வேகவிட வேண்டும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்ற கடுகு,உளுந்தம் பருப்பு போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயம் ,தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்..
- வதக்கிய பொருட்களுடன் மிளகாய்பொடியை சேர்த்து சிறிது வதக்கி ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன் வேகவைத்த பருப்பை சேர்த்து நன்றாக கொதித்தவுடன் தேவையான அளவு உப்பை சேர்த்து இறக்கி விடவேண்டும்,
- இறக்கி வைத்த சாம்பாரில் அரை முடி எலுமிச்சை பிளிந்துவிடவேண்டும்,,