பருத்திப்பால்

4 comments
தேவையான பொருட்கள்:
  • பருத்தி விதை         - 2 கைபிடி 
  • கருப்பட்டி             - 100 கிராம் 
  • தேங்காய் பால்        - அரை மூடி
  • சுக்கு                - அரைவிரளளவு
  • அரிசி மாவு           - 2 ஸ்பூன் 
  • ஏலக்காய்          - 2
செய்முறை:
  •  பருத்தி விதையை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். காலையில் ஊறிய விதையை மிக்சியில் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து பால் எடுக்க வேண்டும்.  
  • கருப்பட்டியை தூளாக்கி ஒரு கப் தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி கொள்ளவேண்டும் .
  • ஓரு பாத்திரத்தில் பருத்திவிதை பாலை ஊற்றி காய்ச்ச வேண்டும் .ஒரு கொதி வந்த உடன் கருப்பட்டி பாலையும் தேங்காய்  பாலையும் ஊற்றி காய்ச்ச  வேண்டும்.
  • இந்த கலவை கொதிக்கும் போது அரிசி மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து அக் கலவையை கொதிக்கும் பருத்தி பாலில் சேர்த்து கரண்டியால் தொடர்ந்து இரண்டு நிமிடம் கிளறி பாத்திரத்தை இறக்கி விடவேண்டும்.
  • சுக்கை சிறிது வறுத்து பொடியாக்கி ,ஏலக்காயை பொடியாக்கி இறுதியில் சேர்க்க வேண்டும்.

4 comments:

  1. அருமையாக இருக்கு.

    ReplyDelete
  2. மிக்க நன்றி ஆசியா .

    ReplyDelete
  3. நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete
  4. நான் தேடியது கிடைத்தது.அருமை ராதா அவர்களே!!!

    ReplyDelete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)