இட்லி சாம்பார்

2 comments

தேவையான பொருட்கள் :
  • துவரம் பருப்பு           -  ஒரு கப்
  • மஞ்சள்பொடி           -  ஒரு சிட்டிகை
  • பெருங்காயம்           - ஒரு சிட்டிகை
  • சின்ன வெங்காயம்  -  பத்து
  • தக்காளி                     -  இரண்டு
  • மிளகாய் பொடி       - ஒரு  ஸ்பூன்
  • கருவேப்பிலை,மல்லி தழை   - சிறிது
  • எலுமிச்சை                  - அரை  முடி
  • கடுகு                           -ஒரு  ஸ்பூன்
  • எண்ணெய்                 - இரண்டு ஸ்பூன்    
செய்முறை :
  • துவரம் பருப்பை  நன்றாக  கழுவி குக்கரில் 2 கப் தண்ணீர்  விட்டு அதில் மஞ்சள்பொடி,பெருங்காயத்துடன் பருப்பை சேர்த்து 3 விசில் வரும் வரை வேகவிட  வேண்டும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்ற கடுகு,உளுந்தம் பருப்பு போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயம் ,தக்காளி  சேர்த்து  வதக்க வேண்டும்..
  • வதக்கிய பொருட்களுடன்  மிளகாய்பொடியை சேர்த்து சிறிது  வதக்கி ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன்  வேகவைத்த பருப்பை சேர்த்து நன்றாக கொதித்தவுடன்  தேவையான அளவு உப்பை சேர்த்து இறக்கி விடவேண்டும்,
  • இறக்கி வைத்த சாம்பாரில் அரை முடி எலுமிச்சை பிளிந்துவிடவேண்டும்,,


    2 comments:

    1. lemon juice for sambar!!! I will try your method next time.

      ReplyDelete
    2. thanks a lot.try it and share with us.

      ReplyDelete

    Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)